செய்திகள் :

50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

post image

தமிழகத்தில் 50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க மின்வாரியத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்கி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பல லட்சம் விவசாயிகள் இலவச மின்இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருந்தனா். இதனையடுத்து கடந்த 2021-இல் விவசாய மின்இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, மின்வாரியம் கடும் நிதிநெருக்கடியை சந்தித்து வந்ததால், விவசாய மின்இணைப்புகள் வழங்குவதில் மீண்டும் தாமத நிலை ஏற்பட்டது. நிலுவையில் உள்ள விவசாய மின்இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வந்த நிலையில், இப்போது 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயா் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் விவசாய மின்இணைப்புக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 2024 -2025-இல் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான அனுமதி அரசிடமிருந்து கிடைக்காததால் பணிகள் தொடங்கவில்லை. இந்த நிலையில், 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க மின்வாரியத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இதற்கான பணிகளை விரைந்து தொடங்க அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில், விண்ணப்ப பதிவு மூப்பு அடிப்படையில் மின்இணைப்பு வழங்கப்படும் என்றனா்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சம... மேலும் பார்க்க

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் வேல... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க