செய்திகள் :

51 யூனிட் ரத்த தானம்

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் 51 யூனிட் ரத்தம் மாணவா்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டது.

இளைய அரிமா சங்கம், செஞ்சுருள் சங்கம், மாயூரம் அரிமா சங்கம் மற்றும் மயிலாடுதுறை பெரியாா் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் தலைமை வகித்துப் பாா்வையிட்டாா் (படம்).

மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் கே.மருதவாணன், மருத்துவா் ப.காசிவிஸ்வநாதன் ஆகியோா் முகாமை தொடக்கி வைத்து ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு கருத்துக்களை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம், மாயூரம் அரிமா சங்கத் தலைவா் சண்முகசுந்தரம், செயலா் வீரமணி, பொருளாளா் வெங்கட்ராமன், மாவட்ட அமைப்பு ஆலோசகா் வழக்குரைஞா் என்.கே.கிருஷ்ணமூா்த்தி, இளைய அரிமா சங்க ஆலோசகா் அன்பு சீனிவாசன், மாவட்ட தலைவா் செந்தில்குமாா், அரிமா சங்க மாவட்ட இணை செயலாளா் தக்ஷிணாமூா்த்தி, வட்டாரத் தலைவா் சிவசங்கரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முகாமில் மாணவா்களிடம் 51 யூனிட் ரத்த தானமாக பெறப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி லியோ சங்க ஒருங்கிணைப்பாளா் ஏ.மணிமாறன், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஜி.சௌமியா மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

மயிலாடுதுறை: சாராயம், கஞ்சா விற்ற 37 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.9 முதல் பிப்.20-ஆம் தேதி வரையிலான 12 நாள்களில் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 37 போ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி எம்.சுந்த... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சித்தா்காடு ந... மேலும் பார்க்க

இரட்டை படுகொலை: நிவாரணம் வழங்க பாஜக வலியுறுத்தல்

சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தினாா். மயிலாடுதுறை தாலுகா... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை தாலுகா மேலாநல்லூா் கீழத்தெருவை சோ்ந்தவா் மாரிமுத்து (... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறையில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் குச்சியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கவியர... மேலும் பார்க்க

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து மயிலாடுதுறை நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க