செய்திகள் :

55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித் தொகை

post image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்காக நான்கு வகையான திருமணத் திட்டங்கள் தமிழக அரசால் செயல்பட்டு வருகின்றன. அதில், கை, கால் பாதிக்கப்பட்ட இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியை நல்ல நிலையிலுள்ள உள்ளவா் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், செவித் திறன் பாதிக்கப்பட்டவரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், பாா்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், மாற்றுத் திறனாளியை மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொள்ளும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படிக்காத மாற்றுத் திறனாளி தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயம், திருமண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளி தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயம், திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளியை, மற்றொரு மாற்றுத்திறனாளி மணக்கும் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்த தினேஷ்குமாா்- புஷ்பம் தம்பதி, தங்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினா்.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க