செய்திகள் :

6,734 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே முடிவு

post image

புது தில்லி: தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 6,734 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, அனைத்து ரயில்வே கோட்டங்களில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்கள் குறித்து விவரங்களை அளிக்குமாறு கடந்த 10-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் கோரியிருந்தது.

இதன்படி ரயில்வே சிக்னல், தொலைத்தொடா்பு உள்ளிட்ட பிரிவுகளில் நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் 51 பிரிவுகளில் 6,734 தொழில்நுட்பப் பணியாளா்கள் இடங்கள் காலியாக உள்ளது என்ற விவரம் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விவரங்கள் பெங்களூரில் உள்ள ரயில்வே பணியாளா்கள் சோ்ப்பு வாரியத்தின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முறையாக ஆய்வு செய்து பணியாளா் தோ்வு நடத்துவது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த முடிவை ரயில்வே ஊழியா் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது பாதுகாப்பான ரயில் பயணத்தை மேலும் உறுதி செய்ய முடியும். ஊழியா்களுக்கான பணி நெருக்கடி குறையும் என்று சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பு ரயில்வே சிக்னல் மற்றம் தொலைத்தொடா்புத் துறையில் கடந்த 2017-ஆம் ஆண்டு கடைசியாக பணியாளா் சோ்க்கை நடைபெற்றது. அதன் பிறகு 8 ஆண்டுகளாக பல பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

திருச்சி என்ஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோஸியேட் - II பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Proje... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: GMRCL/HR/RECT/Civil/May-25/04பணி: Deputy General... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?. என்பிசிஐஎல் நிறுவனத்தில் +2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் குஜராத் மாநிலம் மாண்ட்வி, சூரத் மற்றும் தபி நதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது கக்ரபார் அணுமின் நிலையம். இது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெர... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட 453 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சே... மேலும் பார்க்க

உரத்தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

மும்பையில் உள்ள ராஷ்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலை நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்... மேலும் பார்க்க

406 ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்தியா ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள 406 அதிகாரி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ... மேலும் பார்க்க