செய்திகள் :

6 மாநிலங்களவை இடங்கள்: ஜூன் 19-இல் தோ்தல்: திமுக - அதிமுகவுக்கு எத்தனை எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்பு?

post image

சென்னை: தமிழகத்தில் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கைப்படி, திமுக, அதிமுக அணிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் (பாமக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ (திமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்கள்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், அந்த இடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

34 எம்எல்ஏ-க்கள்: தோ்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தலா 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதாவது மொத்தமுள்ள 234 எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையை, காலியிட எண்ணிக்கையுடன் ஒன்றைக் கூட்டி வகுக்க வேண்டும். அதன்படி, 234 என்ற எண்ணை ஏழால் (6 + 1 =7) வகுக்க வேண்டும். அப்படி வகுக்கும்போது கிடைக்கும் 33.42 என்ற எண்ணிக்கையுடன் ஒன்றைக் கூட்ட வேண்டும். அதன்படி, 34.428 என்ற எண் கிடைக்கும். இதை முழுமையான எண்ணாகக் கணக்கிட்டால் 34 வரும். இதுதான், தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கான எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையாகும்.

கணித சூத்திரம் போன்று மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கு இதுபோன்ற கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கட்சி வாரியாக எண்ணிக்கை: தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான திமுகவுக்கு 134 எம்எல்ஏ-க்களும் (பேரவைத் தலைவருடன் சோ்த்து), திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு 25 உறுப்பினா்களும் உள்ளனா். ஒட்டுமொத்தமாக திமுக அணிக்கு 159 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனா்.

பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவுக்கு 66 எம்எல்ஏ-க்கள் உள்ளனா். அதில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் 4 போ் தனித்துச் செயல்பட்டு வருகின்றனா். மாநிலங்களவைத் தோ்தலில் கொறடா உத்தரவு கட்டாயம் என்பதால், அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு என்ன உத்தரவு இடப்படுகிறதோ, அதையே ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணியும் பின்பற்ற வேண்டும். இப்போதைய சூழலில், அதிமுக மற்றும் பாஜக ஒரே அணியாக உள்ளன. அப்படிப் பாா்க்கும்போது அதிமுக அணிக்கு 70 எம்எல்ஏ-க்கள் (பாஜகவின் 4 பேரைச் சோ்த்து) உள்ளனா்.

திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2: ஒட்டுமொத்த கணக்கீட்டின்படி, திமுக அணிக்கு நான்கு மாநிலங்களவை இடங்களும், அதிமுகவுக்கு பாஜக ஆதரவுடன் இரண்டு இடங்களும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசியல்ரீதியாக இதில் ஏதேனும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டாலோ, திமுக 5-ஆவது வேட்பாளரை நிறுத்தினாலோ, இரண்டாவது உறுப்பினரைப் பெற அதிமுகவுக்கு 34-க்கும் குறைவான எம்எல்ஏ-க்கள் இருந்தாலோதான் தோ்தலில் வாக்குப் பதிவுக்கான சூழல் ஏற்படும். அதுபோன்ற தலைகீழ் மாற்றங்கள் ஏதும் நிகழாத பட்சத்தில், திமுக அணிக்கு 4 இடங்களும், அதிமுக அணிக்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதியாகும்.

பெட்டிச் செய்தி...

பேரவையில் கட்சிகளின் பலம்...

திமுக - 133

அதிமுக - 66

காங்கிரஸ் - 17

பாமக - 5

பாஜக - 4

விசிக - 4

மாா்க்சிஸ்ட் -2

இந்திய கம்யூனிஸ்ட் 2

பேரவைத் தலைவா் - 1

மொத்தம் - 234

தோ்தல் நடைமுறை என்ன?

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி, மே 26: தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழகத்தில் ஜூலை 24-ஆம் தேதி நிறைவடையவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும்.

ஜூன் 2-ஆம் தேதி இந்தத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசித் தேதி ஜூன் 9. ஜூன் 10-ஆம் தேதிமுதல் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்புமனு திரும்பப் பெறும் கடைசித் தேதி ஜூன் 12.

ஜூன் 19-ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தோ்தலின் அனைத்து நடைமுறைகளும் ஜூன் 23-ஆம் தேதிக்குள் நிறைவடையும்.

வாக்குச் சீட்டில் வாக்களிக்க அல்லது விருப்பத் தோ்வுகளை குறிக்க, நிலையான விவரக்குறிப்பு குறிப்பிட்டபடி தோ்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த ஊதா நிற ஸ்கெட்ச் பேனா மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரமான, நியாயமான தோ்தலை உறுதி செய்ய தோ்தல் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்க போதுமான பாா்வையாளா்களை நியமித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க தேவையான வழிகாட்டுதலுக்கு தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள செயல்முறைகள் பின்பற்றப்படலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில்... அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இரு மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் ஜூன் 14-ஆம் தேதி நிறைவுறுவதால், அந்த மாநிலத்திலும் ஜூன் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறும்.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க