செய்திகள் :

7% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

post image

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியச் சந்தையில் 7 கோடி அறிதிறன் பேசிகள் விற்பனையாகின. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் வளா்ச்சியாகும். அந்த மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 21.5 சதவீதம் உயா்ந்து 59 லட்சமாக உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஐ-போன் 16 மிக அதிகமாக விற்பனையான அறிதிறன் பேசியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த அறிதிறன் பேசிகளின் விற்பனை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதங்களைவிட 7.3 சதவீதம் அதிகரித்து 3.7 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விற்பனை 19.7 சதவீதம் அதிகரித்து, 7.5 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுத் தந்தது.மதிப்பீட்டு மாதத்தில் இந்திய அறிதிறன் பேசிச் சந்தையில் 19 சதவீத சந்தைப் பங்குடன் விவோ முதலிடம் வகிக்கிறது. சாம்சங் 14.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஓப்போ 13.4 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ரியல்மி 9.7 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ஷாவ்மி 9.6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஒன்பிளஸ் சந்தைப் பங்கு 4.4 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைந்து, 39.4 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்தது.

இந்திய அறிதிறன் பேசிச் சந்தை 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதுவரை இல்லாத மிகச் சிறந்த வளா்ச்சியைப் பதிவு செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.70 முறை அதிக சந்தா பெற்ற ப்ளூஸ்டோன் ஜூவல்லர்ஸ் ஐபிஓ!

புதுதில்லி: ப்ளூஸ்டோன் ஜூவல்லரி அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட்டின் அதன் முதன்மை பிராண்டான 'ப்ளூஸ்டோன்' கீழ் தனது ஆரம்ப பொதுச் சலுகை பங்கு விற்பனையின் இறுதி நாளில் 2.70 முறை அதிக சந்தா பெற்றதாக தெரிவித்துள... மேலும் பார்க்க

முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,974 கோடியாக உயர்வு!

புதுதில்லி: தங்கக் கடன் வழங்குநரான வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் அதன் ஒருங்கிணைந்த லாபம் ஆண்டுக்கு ஆண்டு 65 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,974 கோடியாக உள்ளது என்று அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.87.43 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 20 காசுகள் உயர்ந்து 87.43 ஆக நிறைவடைந்தது. பலவீனமான கச்சா எண்ணெய் மற்றும் உள்நாட்டு பணவீக்கம் தணிந்ததால் இந்திய ரூபாயை இது வெகுவாக ஆதரித்த... மேலும் பார்க்க

உலகளாவிய சாதகமான குறிப்புகளுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான போக்குக்கு மத்தியில், இந்திய குறியீடுகள் இன்று உறுதியாகத் தொடங்கி, குறிப்பாக ஆட்டோ, உலோகம், மருந்து உள்ளிட்ட துறைகளில் வாங்குதல் தொடர்ந்தததால் அமர்வு முழுவதும்... மேலும் பார்க்க

2% சார்ஜிங்கில் 75 நிமிடங்கள் பேசலாம்! விரைவில் அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 7சி

ஹானர் எக்ஸ் 7சி என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஸ்நாப்டிராகன் 4 நான்காம் தலைமுறை புரசஸர் உடன் 5,200mAh பேட்டரி திறன் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பா... மேலும் பார்க்க

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு ரூ.19,500 தள்ளுபடி! எப்படி வாங்குவது?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு இதுவரை இல்லாத வகையில், ரூ.19,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களையொட்டி இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க