செய்திகள் :

நியூசிலாந்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

post image

நியூசிலாந்து நாட்டின் நார்த் தீவு பகுதியில், 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் ஹாக்ஸ் பே பகுதியில், ஹாஸ்டிங்ஸ் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் நிலப்பரப்பில் இருந்து 30 கி.மீ. ஆழத்தில், இன்று (ஆக.13) 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் அதிர்வுகளை சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் உணர்ந்ததாக, ஜியொநெட் இணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து தற்போது வரையில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அப்பகுதியில் சுற்றியுள்ள கட்டமைப்புகள் அனைத்தும் அதிர்வினால் குலுங்கியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சுமார் 50 லட்சம் மக்கள் வாழும் நியூசிலாந்து நாடானது “ரிங்க்ஸ் ஆஃப் ஃபையர்” எனப்படும் மிகப் பெரியளவிலான டெக்டானிக் பிளவுக்கோட்டின் மீது அமைந்துள்ளதால், அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

A 4.9 magnitude earthquake has struck New Zealand's North Island, the country's Geological Survey has reported.

மியான்மர் வான்வழித் தாக்குதலில் சிக்கிய நிவாரணக் குழு! 8 பேர் பலி!

மியான்மர் ராணுவ அரசின் படைகளுக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்களில் சிக்கிய நிவாரணக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மியான்மரில் மக்... மேலும் பார்க்க

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் தலைமைத் தளபதி மனித குலத்தின் எதிரி: பலூச் தலைவர்!

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததற்கு, அமெரிக்க பலூச் காங்கிரஸ் தலைவர் தாரா சந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவத் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில், 4 நாள்களாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோப் மாவட்டத்தின், சம்பாஸா பகுதியில் பதுங்கி செய... மேலும் பார்க்க

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட... மேலும் பார்க்க

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற... மேலும் பார்க்க