செய்திகள் :

``என் வீட்டை இப்படிச் சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும்?" - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

post image

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனுமில்லை. இதற்கிடையில், அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சந்தித்தது. போராட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை சந்திக்க பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் புறப்பட்டபோது அவர் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் கட்சி தலைவர்களை தி.மு.க அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை!

தமிழகத்தில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விடியா அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும்!" எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ``இது ஒரு ஜனநாயக நாடு. எனது இடத்தை விட்டு வெளியேறவும், எங்கும் செல்லவும் எனக்கு உரிமை உண்டு.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

நான் போராட்டக்களத்துக்குத்தான் செல்கிறேன் என்பது காவல்துறைக்கு எப்படித் தெரியும்? நான் ஒரு சமூக நோக்கத்திற்காக என் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். அவர்கள் என் வீட்டை இப்படிச் சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும்? தமிழக அரசு என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை... இது சரியல்ல. எந்த அடிப்படையில் என்னை அவர்களால் தடுக்க முடியும்? காவல்துறை எப்படி என் வீட்டைச் சுற்றி வளைக்க முடியும்? நான் செல்வேன்..." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"அப்பாவி மக்கள்மீது பழிபோடுவதா..." - 207 அரசுப் பள்ளிகள் மூடலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.5 வயது நிரம்பிய குழந்தைகளின்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்ய திட்டம்? | Privacy -ஐ பறிக்கும் New Income Tax Bill | Imperfect Show

* வருமான வரி மசோதா நிறைவேற்றம்: தனி மனித சுதந்திரங்களை பாதிக்கிறதா?* காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு: வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - நிர்மலா * மக்களவையில் நிறைவேறிய 2 முக்கிய மசோதா?* மத்திய அரசின் ... மேலும் பார்க்க

'கோர்ட் சொல்லிட்டாங்க கலைஞ்சிடுங்க, இல்லன்னா..!' - கடைசி மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில், போராடுபவர்களை காவல்துறை அப்புறப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

"முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியால்தான் நடுத்தெருவில் நிற்கிறோம்" - LTUC தலைவர் பாரதி

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர... மேலும் பார்க்க

``தமிழிசை சௌந்தரராஜனை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயற்சி"- நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க