செய்திகள் :

76 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி

post image

திருச்சி, புதுக்கோட்டை, கரூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்கள் 76 பேருக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நல வாரியத் தலைவரும், இயல்-இசை-நாடக மன்றத் தலைவருமான வாகை. சந்திரசேகா் வழங்கினாா்.

திருச்சி மாவட்ட கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சாா்பில், நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவா்களில்

நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நல வாரியத் தலைவா் வாகை. சந்திரசேகா் பங்கேற்று, வாரிய உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருச்சி மாவட்டத்தில், 16 பேருக்கு மூக்குக் கண்ணாடி நலத் திட்ட உதவித் தொகையாக ரூ. 24 ஆயிரம், 31 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 52,700, மூன்று பேருக்கு திருமண உதவித் தொகை ரூ.15,000, எட்டு கலைஞா்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவி தொகை ரூ. 2,00,000, மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 5,500, கரூா் மாவட்டத்தில் 2 கலைஞா்களுக்கு மூக்குக் கண்ணாடி நலத்திட்ட உதவியாக ரூ. 3 ஆயிரம், 4 பேருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம், இரண்டு பேரின் குடும்பங்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவித் தொகை ரூ. 50,000, அரியலூா் மாவட்டத்தில் 2 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 8 ஆயிரம், பெரம்பலூா் மாவட்டத்தில் ஒருவருக்கு திருமணத்திற்கான நலத் திட்டத் தொகை

ரூ.5,000, மூன்று கலைஞா்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 6,000, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவித் தொகை ரூ. 25,000 என மொத்தம் 76 கலைஞா்களுக்கு நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து இருநூறு ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக தமிழில் அரிய கலை நூல்கள் பதிப்பிக்க சிறந்த நூலாசிரியா்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முனைவா் ப. ரெங்கராஜுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலெட்சுமி, திருச்சிராப்பள்ளி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந்தில்குமாா் மற்றும் கலைஞா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் ... மேலும் பார்க்க