செய்திகள் :

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது: இபிஎஸ்

post image

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், அந்த தியாகி யார் என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்களை கையில் வைத்திருந்த பதாகைகைளை காட்டியதால், அவைக் காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், “டாஸ்மாக் வழக்கு தொடர்பாக பேச பேரவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. டாஸ்மாக் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறுவது தவறு நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தில் இவ்வழக்கை விசாரணை செய்தால், இவர்கள் செய்த தவறுகள் தொலைக்காசி வாயிலாக மக்களுக்கு சென்றடையும். அதை மறைப்பதற்கு இதுபோன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்கள், மீனவர்கள், மக்கள் என அனைவரும் சொந்து நூலாய் போயிருக்கிறார்கள். இன்று மீனவர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

4 ஆண்டுகாலம் மீனவர்கள் படும் துன்பம் இவருக்குத் தெரியாதா? 9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது, அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கும்.” என்றார்.

இதையும் படிக்க: தியாகி யார்? நொந்து நூடுல்ஸான அதிமுகவினர்தான்: பேரவையில் ஸ்டாலின் பதில்

அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!

குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு திமுக தரப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவ... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!

கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசனை தமிழக உணவு ஆணையத்தின் உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கோவை சுற்றுப் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஸ்... மேலும் பார்க்க

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க