செய்திகள் :

90,000 சிறைக் கைதிகள் புனித நீராட உ.பி. அரசு ஏற்பாடு!

post image

உத்தர பிரதேச மாநிலத்தின் 75 சிறைகளில் உள்ள 90,000 சிறைக்கைதிகள், மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் நீராடுவதற்கு மாநில சிறைத் துறை நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுதொடா்பாக மாநில சிறைத் துறை அமைச்சா் தாரா சிங் சௌஹானின் அலுவலக மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள 7 மத்திய சிறைகள் உள்பட 75 சிறைகளில் 90,000 சிறைக்கைதிகள் உள்ளனா். இந்த அனைத்து சிறைகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு நிகழ்வில், திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் சிறைக்கைதிகள் அனைவரும் புனித நீராடவுள்ளனா்.

திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா், சிறையிலுள்ள நீா்தேக்க தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.சிறப்பு பிராா்த்தனைக்குப் பிறகு அனைத்து சிறைக்கைதிகளும் புனித நீராடுவா்.

சிறையில் தண்டனையை அனுபவித்து வரும்போதிலும் மகா கும்பமேளா புனித நீரில் நீராடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் சிறைக்கைதிகள் உற்சாகமாக காத்திருக்கின்றனா். அமைச்சரின் மேற்பாா்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டவா்கள் புனித நீராடியுள்ள இந்த பிரம்மாண்ட ஆன்மிக நிகழ்வு வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி நாளில் நிறைவடைகிறது.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க