செய்திகள் :

``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?

post image

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடத்தில் தனது அறையில் ஏர்கண்டிஷனிங் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அங்கு கடுமையான வெப்பம் ஏற்பட்டு மூச்சு திணறல் அளவுக்கு சென்றதாக மணமகள் கூறியுள்ளார்.

சித்தரிப்பு படம்

”இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இந்த இடம் மனிதாபிமானமற்ற சூழல்” என்று கூறி ஏர் கண்டிஷனரை ஏற்பாடு செய்யுமாறு மணமகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை ஒரு கட்டத்திற்கு மேல் இரு குடும்பத்தினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி பெரும் வாக்குவாதம் ஏற்பட, இந்த விவாகரத்தில் போலீஸ் தலையிடும் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "தனக்கு மரியாதை இல்லாத, அடிப்படை வசதி ஏற்பாடு செய்ய முடியாத ஒரு வீட்டில் தனது வாழ்க்கை நரகமாக மாறும் என்று மணமகள் தனது பெற்றோரிடம் கூறி, திருமணம் செய்ய மறுத்துள்ள்ளார்" என்று தெரிவித்தனர்.

சமரச பேச்சு வார்த்தைகள் செய்ய முயன்றும், அது தோல்வியில் முடிந்துள்ளது. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடைபெறயிருந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.

மேலும் மணமகனின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்பதாக கூறி மணமகளின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க

Air India: `கடைசி உரையாடல்' - விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க

`மரத்தில் வந்த தண்ணீர்' - மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது. இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணிய... மேலும் பார்க்க

``லக்கேஜ் குறைக்க முடியாது..'' - விமான நிலையத்தில் தரையில் புரண்டு அழுத சீன பெண்.. என்ன நடந்தது?

இத்தாலி விமான நிலையத்தில் சீன பெண் ஒருவர் தரையில் புரண்டு அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நியூயார்க் போஸ்ட் இணையதளத்தில் வெளியான தகவலின் படி, சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அந்த பெண், ... மேலும் பார்க்க

போலோ விளையாடியபோது மாரடைப்பு; நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு பின்னர் 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். சஞ்சய் கபூர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: ``ட-வடிவ பாலம்; வாகனங்கள் எப்படி செல்லும்?'' - எதிர்க்கட்சிகள் காட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் 2023-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்... மேலும் பார்க்க