செய்திகள் :

Ajithkumar : "நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" - சொல்கிறார் முன்னாள் கணவர் திருமாறன்

post image

"என்னை திருமணம் செய்துவிட்டு பாலும் பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஒரே நாளில் ஓடியவர்தான் நிகிதா..." என்று முன்னாள் கணவரும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவருமான திருமாறன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவுடன் திருமாறன்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ள நிலையில், புகார்தாரரான நிகிதா மீது, அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடமும் பணமோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிகிதாவின் முன்னாள் கணவரும், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித்தலைவருமான திருமாறன் இன்று மடப்புரம் வந்திருந்தவர் நிகிதா குறித்து அதிர்ச்சிகராமான தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "21 ஆண்டுகளுக்கு முன்புப் என்னை திருமணம் செய்துவிட்டு பாலும் பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடியவர்தான் நிகிதா. 3 திருமணஙகளுக்கு மேல் செய்து பலரையும் ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய்விட்டு அந்த குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்து மிரட்டி பணம் பறிப்பதுதான் அவர் வேலை. என்னிடமும் அவர் தந்தை 10 லட்சம் வாங்கிக்கொண்டுதான் விவாகரத்து அளித்தனர்.

நிகிதா - திருமாறன்

திருமண மோசடியுடன் வேலை வாங்கித் தருவதாகவும் பலரை மோசடி செய்துள்ளனர். புகார் கொடுத்த இவரை போலீஸ் முழுமையாக விசாரித்திருக்க வேண்டும், நகை திருடு போனதாக சொன்னது பொய் குற்றச்சாட்டுதான். கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தன் அதிகாரத்தை காட்ட வேண்டுமென்பதற்காக புகார் கொடுத்துள்ளார். ஈகோ பிரச்சனை கொலையில் முடிந்துள்ளது. அஜித்குமார் கொலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மோசடிகளுக்கு 2 எஸ்பிக்கள், ஒரு டிஎஸ்பி உதவி செய்தனர். அதுபோல் இப்போதும் அதிகாரத்தில் இருபவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்கலாம்" என்றார்.

அரசியல் கட்சித் தலைவரான திருமாறன், தன் முன்னாள் மனைவியான நிகிதா குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஈரோடு: ப்ளஸ் 2 மாணவர் அடித்துக் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது; நடந்தது என்ன?

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்தவர் சிவா. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுடைய மகன் ஆதித்யா (17), மகள் தர்ஷினி (13). ஆதித்யா குமலன்கு... மேலும் பார்க்க

`ரூ.5 லட்சம்' கொடுத்த பணத்தை கேட்டதற்காக வீட்டுக்கு தீ வைத்த உறவினர்.. பெங்களூருவில் நடந்த கொடுமை

பெங்களூரு விவேக் நகரில் இரு குடும்பத்தினர் இடையே பணம் சம்பந்தமான தகராறில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தகராறு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பிருந்... மேலும் பார்க்க

`மீண்டும் வருவேன்' பார்சல் கொண்டுவந்த கூரியர்பாய்; தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

உணவு, தபால், பொருள்கள் என எதாவது ஒரு பொருளை டெலிவரி செய்ய டெலிவரிபாய்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவது இன்று வழக்கமாகிவிட்டது. புனே கொண்ட்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒருவர் கூரியர் டெல... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு Good touch, Bad touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில... மேலும் பார்க்க

`அஜித்குமார் உடலில் 50 காயங்கள்; சிகரெட்டால் சூடு, சித்திரவதை..' - பதற வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாரின் அதிகாரப்பூர்வ உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

திருப்பூர்: ரிதன்யா தற்கொலை வழக்கு; `கணவர் குடும்பத்துக்கு ஜாமீன் வழங்க கூடாது'- நீதிமன்றத்தில் மனு

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை, கணவரின் உடல்ரீதியான சித்ரவதை தாங்க முடியாமல் ரிதன்யா என்ற இளம்பெண் காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொட... மேலும் பார்க்க