செய்திகள் :

Baba Ramdev: மீண்டும் சிக்கலில் பாபா ராம்தேவ்; கைது வாரண்ட் பிறப்பித்த கேரள நீதிமன்றம்!

post image

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவின் மருந்துப் பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கூட இந்த நிறுவனத்தின் மீது வழக்கு நடந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாபா ராம்தேவ் உள்ளிட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், பாபா ராம்தேவ் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக குறிப்பிட்டது.

பாபா ராம்தேவ்

உடனே பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், "விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போலி விளம்பரம் தொடர்பாக செய்தித் தாள்களிலும் மன்னிப்பு கோரும் அறிவிப்பை வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை முடித்துவைத்தது.

அதேபோல, கேரளாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954-ன் விதிகளை மீறியதாகவும், அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாக ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிட்டதாகவும் கேரளம் முழுவதும் பல குற்றவியல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டன.

கேரள உயர் நீதிமன்றம்

பாலக்காடு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவரும் நிலையில், பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. அதனால், பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து கேரள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை; கட்டாய திருமணம் - காவலர் உட்பட 3 பேர் சிக்கிய பின்னணி!

வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, குழந்தைகளுடன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த தம்பதியினரின் 14 வயது மகள், சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வர... மேலும் பார்க்க

வேலூர்: மாயமான பெண் குழந்தை கிணற்றுக்குள் மிதந்த கொடூரம்; கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள தட்டப்பாறை ஏரியின் கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி, விவசாயி. இவரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா, கடந்த 28-ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக்கொண்டிர... மேலும் பார்க்க

பிரியாணிக் கடைக்கு உரிமம் வழங்குவதாகப் பணமோசடி; நீதிமன்ற வாசலில் பாதிக்கப்பட்ட 249 பேர் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், பிரியாணிக் கடை கிளை அமைப்பதற்கு உரிமம் வழங்குவதாக 4 மாநிலங்களைச் சேர்ந்த 249 பேரிடம் கோடிக்கணக்கான‌ ரூபாய் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக போலீஸ... மேலும் பார்க்க

ஊட்டி: காரை மறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; மழுப்பிய சார் பதிவாளர்; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் ஷாஜகான். திருப்பூருக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பொறுப்பு ஏற்பதற்காக ஊட்டி... மேலும் பார்க்க

Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், டிமோதி மால்கம் ரோவ்லேண்ட் என்ற நாற்பது வயது நபர், செக்ஸோமேனியா என்ற நோய் இருப்பதனால் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றமற்றவர் எனத் த... மேலும் பார்க்க

ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?' - காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்... மேலும் பார்க்க