செய்திகள் :

Champions Trophy: 'தீவிரவாத அச்சுறுத்தல்; உளவுத்துறை தகவல்' - பாதுகாப்பைப் பலப்படுத்தும் பாகிஸ்தான்

post image
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சில தீவிரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போட்டிகளுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு பலப்படுத்தியிருக்கிறது.
Icc Champions Trophy

பாகிஸ்தானில் 1996 க்குப் பிறகு ஒரு ஐ.சி.சி தொடர் இப்போதுதான் நடந்து வருகிறது. 2009 இல் அங்கே கிரிக்கெட் ஆட சென்ற இலங்கை அணியின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதன்பிறகு, எந்த நாட்டு அணியும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை. ரொம்ப காலம் கழித்துதான் ஒவ்வொரு அணியாக மீண்டும் அங்கே கிரிக்கெட் ஆட சென்றன. அதிலும் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதே தவிர்த்தே வந்திருக்கிறது. இப்போதும் கூட சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அந்த நாட்டின் உளவுத்துறை தகவல் கொடுத்திருக்கிறது. போட்டிகளை காண வெளிநாடுகளிலிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்களை குறிவைத்து தாக்குதல் அல்லது கடத்தல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.

Pakistan

இதனால் போட்டிகள் நடைபெறும் லாகூர், ராவல்பிண்டி, கராச்சி ஆகிய மைதானங்களில் 12,000 க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருக்கின்றனர். போட்டியை காண வரும் ரசிகர்கள் பலத்த சோதனைக்கு பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

IndvPak : 'ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்கக்கூடாது' - கேம்ப்ளான் பகிர்ந்த கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி சத... மேலும் பார்க்க

PAK v IND: `சதமடித்த கோலி; மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்' - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி நோக்கி இந்தியா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கோலியின் சதத்தாலும் ஸ்ரேயாஸ் ஐயரின் மிரட்டலான ஆட்டத்தாலும் இந்திய அணி எளிதில்... மேலும் பார்க்க

PAK v IND: "பாகிஸ்தானை வீழ்த்த 300 ரன்கள் போதும்..." - கில் சொல்லும் வின்னிங் சீக்ரெட் இதுதான்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை அந்த அணி இழக்கு... மேலும் பார்க்க

Kamalini : 'திரில்லிங் மேட்ச்... மும்பைக்காக வின்னிங் ஷாட் அடித்த தமிழக வீராங்கனை!

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதியிருந்தன. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனை கமலினி அழுத்தமான ச... மேலும் பார்க்க

Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' - ஜாலி ரோஹித்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட... மேலும் பார்க்க

BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' - எப்படி வென்றது இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றி... மேலும் பார்க்க