Chinmayi: ``கர்மாவும் கடவுளும்.. பதிலடி கொடுக்கட்டும்'' - பாடகி சின்மயி முகநூல் பதிவு வைரல்
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் `முத்த மழை' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்அடித்திருக்கிறது. இந்தப் பாடலை தமிழில் பாடகி தீ (Dhee) பாடியுள்ளார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற `தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் அந்த பாடலை சின்மயி பாடினார்.
தீயின் குரலை விட சின்மயின் குரல் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. வாட்ஸப் ஸ்டேட்டஸில் தொடங்கி சோஷியல் மீடியா முழுவதும் சின்மயியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ``இன்னும் 15 ஆண்டுகளில் பாடகி தீ, 100 சின்மயி மற்றும் 100 ஸ்ரேயா கோஷலை தாண்டி செல்வார்" என சின்மயி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
தற்போது சின்மயி தொடர்பான மீடூ விவாகரங்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கிடையில் சின்மயி அவரின் முகநூல் பக்கத்தில், ``கடந்த சில வருடங்களாக நான் அனுபவித்த மோசமான வார்த்தைகள், அவமானங்கள், துன்புறுத்தல்கள், பொய்யர், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்ட பெண் என்றப் பல விமர்சனங்களை எதிர்கொண்டேன்.

அது எல்லாவற்றையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். தற்போது நான் பெற்றுவரும் ஆதரவுகளையும், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான ஆதரவையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பதிலடி கொடுக்கட்டும். இந்தக குற்றச்சாட்டுகளை எதிரக்கொண்டு தப்பிப் பிழைத்த அனைவருக்கும் இப்போது எனக்குக் கிடைக்கும் ஆதரவைப் பெறட்டும். உண்மை வெல்லட்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.