செய்திகள் :

Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

post image

உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் இந்தியா 96-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு இருந்த இடத்தில் இருந்து 3 இடங்கள் பின் தங்கியிருக்கிறது. இந்தியாவுக்கு நிகரான ஊழல் குறியீட்டைக் கொண்ட நாடுகளாக காம்பியா மற்றும் மாலத்தீவு நாடுகள் உள்ளன.

CPI உலகளவில் பொதுத்துறை ஊழல்களை கணக்கெடுத்து வருகின்றது. ஊழல் கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் 0 முதல் 100 வரை புள்ளிகளை வழங்குகிறது. 0 என்றால் அதிகபட்ச ஊழல் நடக்கிறது. 100 என்றால் சுத்தமாக ஊழல் இல்லை.

Corruption

இந்த ஆண்டு இந்தியா 38 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 39 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு 40 புள்ளிகளில் இருந்துள்ளது. இது இந்தியாவில் ஊழல் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகள் ஊழல் அட்டவணையில், இந்தியாவை விட சிறந்த இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் 135, இலங்கை 121. ஆனால் சீனா இந்தியாவை விட அதிக ஊழல் நிறைந்த நாடாக 76-வது இடத்தில் உள்ளது.

Corruption Chart

உலகளவில் மிகவும் குறைவான ஊழல் உள்ள நாடாக டென்மார்க் திகழ்கிறது. அது 90 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து ஃபின்லாந்து 88, சிங்கப்பூர் 84, நியூ சிலாந்து 83.

அதிக ஊழல் நடந்த நாடாக தெற்கு சூடான் வெறும் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடன்று சோமாலியா 9, வெனிசுலா 10, சிரியா 12 நாடுகள் உள்ளன.

Vijay: ``விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி...'' -பாஜக அண்ணாமலை கேள்வி

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க

விகடன் இணையதள முடக்கம்: ``மொத்த கலை வெளிப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்!'' -ஓவியர் ராமமூர்த்தி கண்டனம்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்... மேலும் பார்க்க

Vikatan Cartoon: ``ஒன்றிய அரசு செய்தது சனநாயகததிற்கு எதிரானது"- மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாள்களுக்... மேலும் பார்க்க

சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நாள்களுக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! - கரூர் களேபரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து ... மேலும் பார்க்க

விகடன் இணையதள முடக்கம்: ``மிகத் தவறான முன்னுதாரணம்'' - மு.குணசேகரன் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதள... மேலும் பார்க்க