செய்திகள் :

Delhi : "டெல்லியில் 2, 3 நாள்கள் மட்டுமே தங்குவேன்; ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்" - நிதின் கட்கரி

post image

டெல்லியில் காற்று மாசுபாடு மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1 முதல் 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்களைக் கடந்த பெட்ரோல், சி.என்.ஜி வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என எரிபொருள் நிலையங்களுக்குக் கட்டுப்பாடு வித்தது பாஜக அரசு.

அதன்படி முதல் இரண்டு நாள்களில், 200 காலாவதியான வாகனங்களை அரசு பறிமுதல் செய்ததது.

Delhi Pollution - டெல்லி காற்று மாசு
Delhi Pollution - டெல்லி காற்று மாசு

மறுபக்கம், அரசின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுத்தாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்கள் கொதித்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் பாஜக அரசுக்கெதிராக எதிர்ப்புகள் எழுந்தது.

பின்னர், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, உடனடியாக இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், வாகனம் வெளியேற்றும் காற்று மாசின் அடிப்படையில் அத்தகைய வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினர்.

அதன் பின்னர், ஜூலை 3 தேதி முதல் எந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அரசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திருப்பிக்கொடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

இத்தகைய சூழலில், டெல்லியின் மாசு சாதாரண மக்களின் ஆயுட்காலத்தைக் குறைப்பதாகவும், தான் டெல்லிக்கு வந்தால் இரண்டு மூன்று நாள்கள்தான் தங்குவேன் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

உத்தரப்பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "டெல்லியில் இரண்டு மூன்று மட்டுமே நான் தங்குவேன். டெல்லிக்கு சென்றதும் எப்போது அங்கிருந்து புறப்படுவேன் என்றுதான் யோசிப்பேன்.

டெல்லியில் மாசுபாடு சாதாரண மக்களின் ஆயுட்காலம் குறைவதற்கு வழிவகுக்கிறது. இதைத் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எத்தனால் போன்ற மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், மரக்கன்று நடும் செயல்களைப் பெரிய அளவில் மேற்கொள்வதும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான பயனுள்ள தீர்வுகள்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`வரும் தேர்தலில் உங்களுக்கு வலுசேர்க்கிற மாவட்டமாக கரூர் இருக்கும்!’ - செந்தில் பாலாஜி

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று இரவு கரூர் வந்தார்.இன்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ... மேலும் பார்க்க

`கதர்க் கட்சிக்குத் தாவிய உடன்பிறப்பு டு உயரதிகாரி மீது கன்ட்ரோல் ரூமில் புகாரளித்த மனைவி’ | கழுகார்

சிக்கலில் காவல் உயரதிகாரி!கன்ட்ரோல் ரூமில் புகாரளித்த மனைவி...தலைநகரில், கடலோர வெள்ளை மாளிகையில் பணிபுரியும் டி.ஐ.ஜி அந்தஸ்திலுள்ள ஒரு காக்கி அதிகாரி, 'பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்' என அவருடைய ... மேலும் பார்க்க

``அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இயற்கை விவசாயம் செய்ய போகிறேன்!” - மத்திய அமைச்சர் அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நரேந்திர மோடிக்கு 74 வயதாகிறது. எனவே 75 வயதில் ஓய்வு பெறக்கூடும் என்று கடந்த தேர்தல் முடிவுகளின் போதே பேசப்பட்டது. ஆ... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் ரோடு ஷோ: போஸ்டரால் வெளிவந்த டி.ஆர்.பி.ராஜா, கலைவாணன் ஆதரவாளர்கள் கோஷ்டி மோதல்?

முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருவாரூர் வந்தார். பின்னர் கா... மேலும் பார்க்க

`கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்' - டாக்டர் கிருஷ்ணசாமி

காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு புதிய தமிழகம் கட்சியினர் மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டம்மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், சங்கரன்கோவிலில் முருகன், பாளை... மேலும் பார்க்க

``மாநில சுயாட்சி என்று உரிமை பேசும் முதல்வர் வழக்கை CBI-யிடம் ஏன் கொடுத்தார்?'' - சீமான் கேள்வி

சமீபத்தில் தமிழகத்தையே அதிர வைத்த காவல்துறையினரின் சித்திரவதையால் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் நடந்த ஆர்பாட்டாத்தில் கலந்துகொள்ள வந்த சீமான், அதற்... மேலும் பார்க்க