செய்திகள் :

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

post image

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் பெண் மீதான பாலியல் கொடுமை எனச் சமீபத்தில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் பெரும் கண்டனங்களைப் பெற்றிருக்கின்றன.

பாலியல் வன்முறைகள்
பாலியல் வன்முறைகள்

இந்நிலையில் இன்று (பிப் 10) அண்ணா அறிவாலயத்தில் தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசியிருக்கும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எங்கள் ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில், எங்கள் ஆட்சியில்தான் பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளுக்குத் தைரியமாக முன்வந்து காவல்துறையில் புகாரளிக்கிறார்கள்.

பெண்களின் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உடனே எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தும் எஃப்.ஐ.ஆர் (FIR) உடனே பதிவு செய்யப்படவில்லை. 14 நாட்களுக்குப் பிறகு வந்த அழுத்தத்தினால்தான் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டது.

ரகுபதி
ரகுபதி

அ.தி.மு.க ஆட்சியில் புகாரளித்தாலும் நீதி கிடைக்காது, எஃப்.ஐ.ஆர் (FIR) கூட போட மாட்டார்கள் என்ற விரக்தியில் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளுக்குப் புகாரளிக்கவில்லை. எங்கள் ஆட்சியில் நீதி கிடைக்கும், யாராக இருந்தாலும் உடனே எஃப்.ஐ. ஆர் (FIR) போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்கள் நம்புகிறார்கள். அதனால் அதிக பாலியல் வழக்குகள் எங்கள் ஆட்சியில் பதிவாகிறது" என்று பேசியிருக்கிறார் அமைச்சர் ரகுபதி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த சட்டத்திற்கு... மேலும் பார்க்க

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனம... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க

Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலிய... மேலும் பார்க்க

ADMK: ``எடப்பாடி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை..'' -செங்கோட்டையன் ஓபன் டாக்

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு - அவிநாசி’ திட்டம் நிறைவேறியிருக்கிறது.ஜெயலலிதா மறைவுக... மேலும் பார்க்க