செய்திகள் :

Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?

post image

Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம். நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பதால் சருமத்தில் ஒருவித சுருக்கம் ஏற்படுவது போல உணர்கிறேன்.  இரண்டில் எது சரி? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சிலருக்கு நீண்ட நேரம் ஷவரின் அடியிலோ, குழாயின் அடியிலோ, ஆறு, குளத்திலோ  நின்று குளிப்பது மிகவும் பிடிக்கும். அது மிகவும்  தவறானது.  அதிகபட்சம் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிட வேண்டும். 

தலைக்குக் குளிப்பதானால், ஷாம்பூ உபயோகிப்பது, பிறகு கண்டிஷனர் உபயோகிப்பது என எல்லாவற்றுக்கும் சேர்த்து 10 நிமிடங்கள் போதும்.  அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரே சரியானது. குளிர்காலத்தில்கூட அதிக சூடான நீர் உபயோகிக்கக்கூடாது. வெயில்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது. வெந்நீரில் குளித்தால் சருமத்தின் துவாரங்கள் திறந்து இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் வெளியேறிவிடும்.

சிலர் கொகொரவென்ற ஸ்கிரப் உபயோகித்தோ, பிரஷ் உபயோகித்தோ தேய்த்துக் குளிப்பார்கள்.  ஒவ்வொரு முறை இப்படித் தேய்க்கும்போதும், அது சருமத்தில் உராய்வை, கீறல்களை ஏற்படுத்தும். சருமத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அந்த இடம் எப்படி நிறம் மாறி, பிறகு சரியாகுமோ, தேய்த்துக் குளிக்கும்போதும் அப்படித்தான் ஏற்படும். தேவையில்லாமல் நீங்களே பிக்மென்ட்டேஷன் பிரச்னையை வரவழைப்பதற்குச் சமம் இது.

குளிப்பதற்கு சோப் அல்லது பாடி வாஷ் சிறந்தது.

குளிப்பதற்கு சோப் அல்லது பாடி வாஷ் சிறந்தது. முகத்துக்கு ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். முகத்தின் சருமமும் உடலின் சருமமும் வேறு வேறானவை. எனவே, உடலுக்கு உபயோகிக்கிற சோப்பையோ, பாடி வாஷையோ முகத்துக்கு உபயோகிக்கக்கூடாது.

குளித்த பிறகு சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசை சற்று வெளியேறியிருக்கும். அதை திரும்பப் பெறும்வகையில் குளித்து முடித்ததும் முகம், கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Immune Drinks: நோய் எதிர்ப்பு சக்தி தரும் சாறுகள்!

கொரிமேட்டோ ஜூஸ்கொரிமேட்டோ ஜூஸ்தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - த... மேலும் பார்க்க

Plastic: `இதயத்தைப் பாதிக்கும் ஷாம்பூ பாட்டில்'- அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு; விரிவான தகவல்கள்!

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சந்தேகத்துக்கு உட்படுத்துகிறது இந்த ஆய்வு.நம் இதயத்தை பலவீனமடைய... மேலும் பார்க்க

உலக யோக தினம்: புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி | Photo Album

உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிஉலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிஉலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் ந... மேலும் பார்க்க

மணிக்கணக்கில் இயர்போன் பயன்படுத்திய பெண்; காது கேளாமையால் பாதிக்கப்பட்டது எப்படி?

வயர்லெஸ் இயர்போன்களை பலரும் இன்று பயன்படுத்தி வருகின்றனர். பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அல்லது சத்தம் வெளியே வரக்கூடாது என்பதற்காகவும் இயர்போன்களை தினமும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இயர்ப... மேலும் பார்க்க

Apollo: இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம்

சென்னை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை [Apollo Children's Hospital, Chennai], இன்று தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்த... மேலும் பார்க்க

மதுரை: சர்வதேச யோகா தினத்தை பள்ளி குழந்தைகளோடு கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album

சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர... மேலும் பார்க்க