செய்திகள் :

Doctor Vikatan: `50 வயதில் திடீர் மூச்சுத்திணறல்.. கொரோனா வந்தவர்களுக்கு இப்படி வருமா?'

post image

Doctor Vikatan:  நான் 50 வயதுப் பெண். ஆக்டிவ்வாக இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கு திடீரென மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டது. ஒருவித அசௌகர்யமான உணர்வு ஏற்படவே, ஹார்ட் அட்டாக் அறிகுறி என நினைத்து மருத்துவரிடம் போனேன். இசிஜி எடுத்துப் பார்த்து பிரச்னை இல்லை என்றார்.

பிறகு மூச்சு சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம் என நுரையீரல் மருத்துவரையும் பார்த்தேன். அவரும் பிரச்னை இல்லை என்றார். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகவும் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

அருண் கல்யாணசுந்தரம்

அறிகுறிகளை உணர்ந்ததும் உடனடியாக மருத்துவரை அணுகிய செயல் பாராட்டத்தக்கது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு 'லாங் கோவிட் சிண்ட்ரோம்' (long covid syndrome) என்ற பாதிப்பு வருவது பற்றி கொரோனா காலத்திலேயே நிறைய பேசியிருக்கிறோம். 

அதாவது கோவிட் வந்து குணமானவர்களாக இருப்பார்கள். நுரையீரல், இதயம் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனாலும் ரொம்பவே பலவீனமாக இருப்பதாகச் சொல்வார்கள். களைப்பாக உணர்வார்கள். ஒரு மாடி ஏறினாலே நெஞ்சை அடைப்பது போலிருப்பதாகச் சொல்வார்கள். தூக்கம் வரவில்லை என்பார்கள். படபடப்பு, பதற்றம் இருக்கும். மொத்தத்தில் ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள். இந்த அறிகுறிகளைப் பார்த்துவிட்டு  சம்பந்தப்பட்டவர்களுக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை என்றே அவரை சார்ந்தவர்கள் நினைப்பார்கள். சம்பந்தமே இல்லாத அறிகுறிகளாகப் பார்ப்பார்கள்.

கோவிட் வந்து குணமானவர்களாக இருப்பார்கள். நுரையீரல், இதயம் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனாலும் ரொம்பவே பலவீனமாக இருப்பதாகச் சொல்வார்கள்

ஆனால், கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் தென்படுவதை 'லாங் ஹாலர்ஸ் அல்லது 'லாங் கோவிட்' என்றும் இந்த அறிகுறிகள் கொரோனாவிலிருந்து குணமானதிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வைரஸ் உருவாக்கும் வீக்கமே இதற்கு காரணம்.  உலகம் முழுவதிலும் காணப்படுகிற லாங் கோவிட் பிரச்னையிலிருந்து  இவர்கள் குணமாக தாமதமாகலாம்.  கொரோனா தொற்றுக்குள்ளான எல்லா வயதினருக்கும் இந்த அறிகுறிகள் பாதித்தாலும் 40-60 வயதுக்காரர்களுக்கு சற்று அதிகம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள், சுவாசப்பாதை தொற்றின் காரணமாகவோ, வீக்கம் காரணமாகவோ ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வேறு பிரச்னைகளாகவும் இருக்கலாம். நீங்கள் சாதாரண இசிஜி, எக்கோ பரிசோதனைகளை மட்டும் பார்த்துவிட்டு, இது இதயம் தொடர்பான பிரச்னை இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. எனவே, நீங்கள் இதயநல மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனைகளைச் செய்து பார்த்து உறுதிசெய்வதுதான் சரியானது. வேறு ஏதேனும் ரிஸ்க் காரணிகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

இதயநல மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனைகளைச் செய்து பார்த்து உறுதிசெய்வதுதான் சரியானது.

மருத்துவர் பார்த்துவிட்டு, உங்களுக்கு டிரெட்மில் டெஸ்ட், இதயத்துக்கான ஸ்கேன் போன்றவை தேவையா என்று சொல்வார். அதே சமயம், இந்தப் பிரச்னை கொரோனா தொற்றுக்குப் பிறகான பாதிப்பாகவும் இருக்கக்கூடும். எனவே, மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Gingee Fort: செஞ்சிக் கோட்டைக்கு கிடைந்த யுனெஸ்கோ அங்கிகாரம்; பின் தொடரும் சலசலப்பு! - என்ன காரணம்?

யுனெஸ்கோ உலக பாரம்பர்யச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 - 25-ம் ஆண்டு பரிந்துரையாக 'Maratha Military Landscapes' என்ற பெயரில் 12 கோட்டைககளை இந்திய அரசின் கலாசார அமைச்சகம் பரிந்துரைத்து அனுப்பியது. அத... மேலும் பார்க்க

``எம்.பி-க்களுக்கு மட்டும் அலுவலகம் இல்லை; தமிழக அரசு மறுக்க காரணம் என்ன?'' - சு.வெங்கடேசன் கேள்வி

விசிக எம்.பி ரவிக்குமார், "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரவர் தொகுதிகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும்.மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களே வாடகைக... மேலும் பார்க்க

TVK: `முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!' - பனையூரின் `மாநாடு' மூவ்; எடப்பாடிக்கு செக்?

'முக்கிய மெசேஜ்!'தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்று திடீரென பனையூரிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பறந்திருக்கிறது... மேலும் பார்க்க

``ஸ்டாலின் துரோகி; வன்னியர்களின் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு கிடையாது'' - கொந்தளிக்கும் அன்புமணி!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் போராட்டம் நடந்திருந்தது. அதில், திமுக அரசுக்கு எதிராக அன்புமணி கடுமையாக கொந்தளித்திருக்கிறார். அன்புமணி ராம... மேலும் பார்க்க

``வருங்கால துணை முதல்வரே..'' - உசுப்பேத்திய நிர்வாகி; பதறிப்போன நயினார்!

அணியில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நிர்வாகி ஒருவர் 'வருங்கால துணை முதல்வரே...' என அழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நயினார் நாக... மேலும் பார்க்க

MODI -க்காக RSS -ஐ பகைத்துக்கொள்ளும் BJP ? | MK STALIN ADMK TVK VIJAY | Imperfect Show 19.7.2025

* போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி. * வரதட்சணை வழக்கு - கணவர் பூபாலன் கைது!* என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது காவல் துறைக்கே தெரியும் ... மேலும் பார்க்க