செய்திகள் :

Doctor Vikatan: மாத்திரை போட்டால் மட்டுமே வரும் மாதவிடாய், தீர்வே கிடையாதா?

post image

Doctor Vikatan: உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் வருவதில் சிக்கல் இருக்குமா? நான் 80 கிலோ எடை இருக்கிறேன். வயது 35. எனக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் சரியாக வருவதில்லை. மாத்திரை எடுத்துக்கொண்டால் மட்டுமே வரும், இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல்பருமன் மிக முக்கியமான காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வயதையும் எடையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் உடல்பருமன் பிரிவில்தான் வருவதாகத் தோன்றுகிறது. 

உடல் பருமன் பிரச்னை என்பது மாதவிடாய் சுழற்சியை மாற்றுவது மட்டுமன்றி, தலை முதல் பாதம் வரை பல பிரச்னைகளுக்கும் காரணமாகும்.

இதிலிருந்து விடுபட நீங்கள் முதலில் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். பகலில் தூங்குவதையும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்ப்பது, ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்ப்பது, செயற்கை நிறமி மற்றும் மணம் சேர்க்கும் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை அவசியம்.

தினமும் குறிப்பிட்ட நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். யோகாவும்  உதவும்.

உடலை இளைக்கச் செய்கிற உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகள் தவிர்த்து, ஆவியில் வெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

காலை உணவுக்கு முளைக்கட்டிய தானியங்கள், அவல் போன்றவற்றை 50 கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம். கூடியவரையில் சமைக்காமல் சாப்பிடுவது சிறந்தது.  

உடல் பருமன் பிரச்னை

உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து பார்க்கவும். ஒருவேளை இருந்தால் அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

தைராய்டை குணப்படுத்தாமல் மாதவிடாய் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கக்கூடாது. மாதவிடாயை முறைப்படுத்தக்கூடிய இயற்கையான மருத்துவமுறைகள் சித்தாவில் உள்ளன.

இரண்டு பல் மலைப்பூண்டை, ஒரு கப் பாலில் வேகவைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் காலையில்  சாப்பிடுங்கள்.

முருங்கைக்கீரை, தினம் 2 எள்ளுருண்டைகள், கல்யாண முருங்கையில் அடை, தோசை போன்றவற்றை சாப்பிடுங்கள். மலைவேம்புச் சாற்றை மாதத்தில் மூன்று முறை 15 முதல் 20 மில்லி அளவுக்கு காலையில் குடிக்கலாம்.

கழற்சிக்காய் என்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதன் விதைகளை தினம் 5 என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் சுழற்சி முறைப்படும்.

இவையெல்லாம் அடிப்படையான ஆலோசனைகள்.   மருத்துவரை அணுகினால், உங்களுக்குத் தேவைப்படுகிற பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். அவற்றில் தெரியும் விஷயங்களுக்கேற்பவும் உங்களுக்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். 

எடைக்குறைப்பு, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சை என எல்லாம் சேரும்போது உங்கள் மாதவிடாய் சுழற்சி முறைப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: 40 வயது, இரண்டாம் திருமணம், பல வருடங்களாக குழந்தையில்லை; இனி சாத்தியம் ஆகுமா?

Doctor Vikatan:நாங்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள். நான் 40 வயது பெண். எனக்கு கருத்தடை ஊசிபோட்டு இருக்கிறார்கள். 18 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹீமோகுளோபின் குறைபாடு; பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் அபாயத்தை அதிகரிக்குமா?

Doctor Vikatan:ஹீமோகுளோபின் குறைபாடு இதயச் செயலிழப்பை ஏற்படுத்துமா? குறிப்பாக பெண்களுக்கு, ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இதய பாதிப்பின் அறிகுறிகளை எப்படி உணர்வார்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அறிகுறியா?

Doctor Vikatan: என் மகள் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில நாள்களாகஇடுப்புக்கும் தொடைக்கும் இடையில் அடிக்கடி வலிப்பதாகச்சொல்கிறாள். இதனால் அபார்ஷன் அறிகுறியாக இருக்குமோ, கரு கலைந்துவிடு... மேலும் பார்க்க

செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை Pick-up & Drop செய்முறை பற்றி தெரியுமா? | பூப்பு முதல் மூப்புவரை

ஆச்சர்யமான அறிவியல் பயணம்...கருத்தரிப்பு நிகழ்வு என்பதே இயற்கையில் நிகழும் ஓர் அழகிய பயணம் என்றிருக்க, செயற்கை கருத்தரிப்பில் இந்தப் பயணத்தை முழுமையாக்கிட உதவுகிறது ஒரு பிக்-அப் அண்ட்ட்ராப்.!ஆம், 'Ooc... மேலும் பார்க்க

Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?

“நம் பாட்டி, அம்மா காலங்களில் உடல் உழைப்புத் தேவையான அளவு இருந்ததால், கர்ப்பக்காலத்தில் அவர்கள் உடற்பயிற்சி எனத் தனியாக எதுவும் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இன்றோ, மூளை உழைப்புப் பணிகள் பெருகியிர... மேலும் பார்க்க