செய்திகள் :

ECR: "அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்..." - காவல் துணை ஆணையர் விளக்கம்

post image
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வந்த பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெண்களைத் துரத்திய அந்த இளைஞர்களின் காரில் தி.மு.க கொடி பறந்தது அரசியல் சர்ச்சையாகியிருந்தது. இதுகுறித்து, "சென்னை ஈ.சி.ஆர் சாலையில் இளைஞர்களின் காரை பெண்களின் கார் இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்றதால், அந்த இளைஞர்கள் அந்தப் பெண்களின் காரை துரத்திச் சென்றுள்ளனர். பிரச்னையில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம்" என்று சென்னை கிழக்குக் கடற்கரை கானாத்தூர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண், "நாங்கள் யாருடைய வாகனத்தையும் இடிக்கவில்லை, வேண்டுமென்றால் சிசிடிவி-யை சோதனை செய்து பாருங்கள்" என்று கூறியிருந்தனர்.

ஈ.சி.ஆர் வைரல் காணொலி காட்சிகள்

இந்த வழக்கில் 4 பேர்கள் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளியான சந்துரு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து நேற்று (பிப் 1) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் பள்ளிக்கரனை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், "இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரைக் கைது செய்துள்ளனர். இப்போது சந்துரு என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்துரு என்பவர் மீது ஏற்கனவே கடத்தல், சீட்டிங் என இரண்டு வழக்குகள் இருக்கின்றன. சம்பவத்தின்போது காரில் கட்சிக் கொடி இருந்தது தொடர்பாக விசாரணை நடத்தினோம். சிசிடிவி கேமராக்களை செக்கிங் செய்திருக்கிறோம்.

சந்துருவின் நண்பர் சந்தோஷ் என்பவர் கட்சிக் கொடியைக் காரில் கட்டும் பழக்கமுடையவர். அவர்தான் சந்துருவின் காரிலும் கட்சிக் கொடியைக் கட்டிவிட்டுள்ளதாகக் கூறினார்கள். நெடுஞ்சாலையில் இருக்கும் டோல்களைத் தவிர்ப்பதற்காக, சும்மா பந்தாவிற்காகக் கட்சியைக் கொடியைப் பயன்படுத்தியுள்ளனர். சந்துருவின் உறவினர் ஒருவர் தி.மு.க-வில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

காவல் துணை ஆணையர் கார்த்திகேயன்

ஆனால், இந்த வழக்கிற்கு சந்துருவின் பின்புலத்தைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அவசியம் ஏற்பட்டால் விசாரணை நடத்துவோம். இதில் இரு தரப்பினரும் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறார்கள். உண்மை புலன் விசாரணையை முடித்துவிட்டு அறிவிப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

TVK Vijay: "மத்திய பட்ஜெட்டில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏழை மக்களுக்கு அநீதி" - விஜய்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார்.இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அ... மேலும் பார்க்க

Union Budget 2025 : பட்ஜெட்டில் இடம்பெறாத `தங்கம்' குறித்த அறிவிப்பு.. இன்று சந்தையில் விளைவு என்ன?

உலக அளவில் பொருளாதார மந்த நிலை, போர் பதற்றம், உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களால்... தங்கம் விலை ஏற்கெனவே தாறுமாறாக உயர்ந்துகொண்டிருந்தது. இன்று வெளியாகும் மத்திய பட்ஜெட்டில் தங்கம... மேலும் பார்க்க

Union Budget 2025 : `உங்கள் வருமானத்திற்கு வரி உண்டா?' - இங்கே செக் செய்து கொள்ளுங்கள்!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகைக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, நிச்சயம் 'ஹேப்பி' நியூஸ். கடந்த ஆண்டு வருமான வரி சலுகை உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக இருந்த நிலையில், இப்போது ரூ.12... மேலும் பார்க்க

Budget 2025: 'கிரெடிட் கார்டுகள், கடன்கள்'- சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகி முடிந்துள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான முக்கிய அறிவிப்புகள்...* இந்த கிரெடிட் கார்டை உதயம் வலைத... மேலும் பார்க்க

Budget 2025: ஆந்திராவுக்கு கவிதை... பீகாருக்கு `5' திட்டங்கள் - பட்ஜெட்டில் இடம்பெற்ற விஷயங்கள்!

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசின் முக்கிய தூண்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் என்றே சொல்லலாம். ஆந்திர பிரதேசத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு கொடுத்த ஆதரவும், பீகாரில் இருந்து நிதி... மேலும் பார்க்க

Union Budget 2025: அடையாள அட்டை, மருத்துவ உதவி... டெலிவரி பாய் போன்ற Gig தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

குறைந்த வேலைவாய்ப்புகள், நிலையற்ற வேலைவாய்ப்புகள் போன்ற காரணங்களால், டெலிவரி பாய் போன்ற கிக் வேலைகளை நோக்கி இளைஞர்கள் அதிகம் நகர்ந்து வருகின்றனர்.நிச்சயமான வேலை, நிரந்தர வருமானம், உரிய அங்கீகாரம், நிர... மேலும் பார்க்க