Guru Mithreshiva: "Asset-க்கும் liability-க்கும் உள்ள வித்யாசம் இதுதான்" - நாகப்பன் பேச்சு
ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பணவாசம் நூல் குறித்து பேசிய பொருளாதார நிபுணர் நாகப்பன், Asset-க்கும் liability-க்கும் உள்ள வித்தியாசத்தை இந்தப் புத்தகத்தில் அழகாக விளக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
"எவ்வளவு வருமானம் வருகிறதோ அதற்குச் சமமாகச் சொத்து வாங்குகிறோம். அப்படி வாங்கும் சொத்து நமக்கு மேற்கொண்டு செலவு வைக்காமல் இருந்தால்தான் அது சொத்து. உதாரணமாக வருமானத்தை வைத்து கார் வாங்கினால், ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் செலவுதான்.
அந்தக் காலத்தில் முப்பதாயிரம் ரூபாய்க்குக் கல்லூரி கட்டணம் வேண்டும் என்று கேட்டால், படித்து முடித்துவிட்டு எவ்வளவு சம்பாதிப்பாய் என்று நம்முடைய அப்பாக்கள் கணக்கு கேட்பார்கள்" என்று பேசினார்.

மேலும், "சுதர்மத்தை நீ அறிந்து நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணம் கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தரும். மனநிலையை மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொண்டால் மன மகிழ்ச்சியான வாழ்க்கையும் வாழலாம்." என்றார்.
Guru Mithreshiva நிகழ்ச்சி
விகடன் பிரசுரம் வெளீயீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே.குமரவேல், ஜோதிடர் கே.பி.வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.