செய்திகள் :

H1B விசா: 'இவர்கள்' 1 லட்சம் டாலர்கள் கட்ட வேண்டியதில்லை; ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா

post image

கடந்த மாதம், ஹெச்-1பி விசா கட்டணமாக 1 லட்சம் டாலர் (கிட்டத்தட்ட ரூ.90 லட்சம்) என அறிவித்தது அமெரிக்க அரசு. இது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

இந்த விசாவைப் பெறும் 66 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதால் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நேற்று இந்த விசா குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்கா
Donald trump - டொனால்ட் ட்ரம்ப்
Donald trump - டொனால்ட் ட்ரம்ப்

அதன் படி, ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் ஹெச்-1பி விசாதாரர்களுக்கு இந்தக் கட்டணம் இல்லை.

தற்போது அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருக்கும் ஒருவர், ஹெச்-1பி விசாவிற்கு அப்கிரேட் ஆனாலும், அவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டியதில்லை. ஆனால், இந்த இரண்டு நடைமுறைகளுக்கு இடையிலும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி இருக்கக்கூடாது.

புதிதாக ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்கா வருபவர்களும், ஹெச்-1பி விசா காலக்கெடு முடிந்து மீண்டும் விண்ணப்பிப்பவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டும்.

இப்போது செல்லுபடி ஆகும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியே செல்வதற்கும், மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் யாரும் செய்ய இயலாத பணிக்காக, வெளிநாட்டில் இருந்து ஒருவரை அழைத்து வந்தால், அவர்களுக்கு ஹெச்-1பி விசா கட்டணம் இல்லை.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று... மேலும் பார்க்க

``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன... மேலும் பார்க்க

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்... மேலும் பார்க்க

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" - திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.சுமுக உறவு ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பர... மேலும் பார்க்க