செய்திகள் :

IAF: தாக்கப்பட்டாரா இந்திய விமானப் படை வீரர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ஷிலாதித்ய போஸ் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. கடந்த 18-ம் தேதி ஷிலாதித்யாவும் அவரது மனைவி மதுமிதாவும் விமான நிலையத்திற்கு செல்லும் போது, கால் சென்டரில் வேலை செய்யும் விகாஷ் குமாரின் பைக் சைலன்ஸர் காரில் உரசியதாகக் கூறப்படுகிறது.

அதனால் இருவருக்குமத்தியில் வாக்குவாதம் ஏற்பாட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து, ஷிலாதித்யா போஸ் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

வைரல் வீடியோ

அந்த வீடியோவில் தலை, முகத்தில் கட்டுப்போடப்பட்டிருந்த நிலையில் பேசிய ஷிலாதித்யா, ``இந்தியாவின் விமானப் படையில் பணிசெய்யும் தன்னை ஒரு குடிமகன் தாக்கிவிட்டதாகவும், அவரை எதிர்த்து சரியாக தாக்குதல் நடத்தவில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும், விகாஷ் குமாரை கடுமையாக விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து, விகாஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷிலாதித்யா போஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.

காவல்துறை விசாரணை

இது தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அதை வெளியிட்டது. அதில், ஷிலாதித்ய போஸ்தான் விகாஷ் குமாரைக் கடுமையாக தாக்குவதும், அவரை அடித்து கீழே தள்ளுவதும் பதிவாகியிருந்தது.

வைரல் வீடியோ

இது தொடர்பாகப் பேசிய விகாஸ் குமாரின் தாயார் ஜோதி, ``சம்பவம் பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை. ஆனால், தற்போது இந்திய விமானப்படை அதிகாரி காவல்துறையிடம் சென்றுள்ளதால், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தவறு செய்தபோது என் மகன் மீது நடவடிக்கை எடுப்பது தவறல்லவா? ஒரு ராணுவ அதிகாரியாக, ஒருவரைக் கடிப்பதும் அடிப்பதும் சரியா? அவரே சட்டத்தைக் கையில் எடுக்கலாமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விமானப் படை அதிகாரி மீது பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 109 (கொலை முயற்சி), 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 304, 324, 352 (வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கால் சென்டர் ஊழியர் விகாஸ் குமார் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

``உயிரோட வீட்டுக்கு போயிடுவியா..'' - நீதிபதிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் மிரட்டல்

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆறு வருடமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்... மேலும் பார்க்க

திருமணத்தில் `ஊதா கலர் டிரம்' கிப்ஃட்; `மீரட் கொலை' நினைவால் மணமகன் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து கடந்த மாதம் தன் கணவரை கொலை செய்தார். அதோடு கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி அதனை ஊதா கலர் டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு மூ... மேலும் பார்க்க

Samantha: `ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்?' - சமந்தா லைக் செய்த வீடியோ

சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ 'டைரி ஆஃப் எ சிஇஓ' என்ற youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டது. அந்த வீடியோவில் 'ஆண்க... மேலும் பார்க்க

``தண்ணீர் பஞ்சத்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை.." - தண்ணீரை பூட்டி வைக்கும் கிராமத்தினர்

நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் அதிக பட்ச வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: தன்னை அழைப்பதாக எண்ணி கையைத் தூக்கியவருக்கு ஆப்ரேஷன்; வைரலான சம்பவத்தில் நடந்தது என்ன?

தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் ... மேலும் பார்க்க

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்த... மேலும் பார்க்க