செய்திகள் :

ICC Women's World Cup: 169 ரன்கள் குவித்த லாரா வோல்வார்ட்; இறுதிப்போட்டிக்குள் தென்னாப்பிரிக்கா!

post image

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி குவாஹாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் சரியான இடைவெளியில் பவுண்டரிகளுடன் 23வது ஓவர் வரை விக்கெட் இழக்காமல் 116 ரன்கள் சேர்த்தனர்.

லாரா வோல்வார்ட்
லாரா வோல்வார்ட்

அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகள் விழ, லாரா உடன் மாரிசேன் காப் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சீரான வேகத்தில் ரன்கள் சேர 36.3 ஓவரில் விக்கெட்டை 42 அடித்திருந்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அடுத்ததாக பெரிய பார்ட்னர்ஷிப்கள் அமையாதபோதும், அதிரடியாக விளையாடி 4 சிக்சர்கள், 20 பவுண்டரிகளுடன் 143 பந்துகளில் 169 ரன்கள் குவித்தார் லாரா வோல்வார்ட். இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சொதப்பலாக மரிசான் காப்பின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து, 1.1 ஓவரில் வெறும் 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிந்துவிட்டதாக நினைக்கும்போது, கேப்டன் நாட் ஸ்கிவர் மற்றும் ஆலிஸ் காப்ஸே கூட்டணி அமைத்தனர். 22.5 ஓவரில் அரைசதம் அடித்திருந்த காப்ஸே விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

மரிசேன் காப்
மரிசேன் காப்

64 ரன்களில் ஸ்கிவரும் மரிசான் காப்பின் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால், வெற்றிக்கு வழியே இல்லாமல் தவித்தது இங்கிலாந்து அணி.

மரிசான் காப்பின் 31வது ஓவரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனைகள் சோபியா டங்க்லி மற்றும் சார்லி டீன் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். 42.3 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

169 ரன்கள் அடித்து, 320 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்கவும் இங்கிலாந்து பேட்டர்கள்மீது அழுத்தம் கொடுக்கவும் வழிவகுத்த லாரா வோல்வார்ட் ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.

இளம் வீராங்கனை லாரா வோல்வார்டின் அதிரடியான பேட்டிங்கும், மரிசான் காப்பின் அனுபவமிக்க பந்துவீச்சும் சேர்ந்து, தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கிறது தென்னாப்பிரிக்கா!

Shreyas Iyer: ``நான் குணமாகி வருகிறேன்'' - உடல்நிலை குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தக்... மேலும் பார்க்க

"ஆஸி பவுலர்களின் பாணி தெரியும்; இதைச் செய்தால் வெற்றி நிச்சயம்" - அரையிறுதிக்கு முன் ஷபாலி உறுதி

நடப்பு மகளிர் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின... மேலும் பார்க்க

Rohit Sharma: 38 வயதில் நம்பர் 1; ICC தரவரிசையில் முதல் இடம் பிடித்த ரோஹித் சர்மா

ஐசிசி (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரி... மேலும் பார்க்க

Shreyas Iyer: 'ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருக்கிறார்' - சூர்யகுமார் யாதவ் அப்டேட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஸ்ரேயஸ்... மேலும் பார்க்க

பிரதிகா ராவல் காயம்; அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் - கம்பேக் தரும் ஷபாலி!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இரண்டாவது அரையிற... மேலும் பார்க்க