செய்திகள் :

Jammu - Kashmir: உளவுத்துறை அதிகாரி உள்பட 28 பேர் பலி!; ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம், சந்துரு ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணீஷ் ரஞ்சன்
மணீஷ் ரஞ்சன்

இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத்துறை (ஐபி) அதிகாரி மணீஷ் ரஞ்சனும் ஒருவர். பீகாரைச் சேர்ந்த மணீஷ் ரஞ்சன் ஹைதராபாத்தில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர், தனது குடும்பத்தினருடன் விடுமுறைப் பயணத்தில் கஷ்மீர் சென்றிருந்தார். அப்போதுதான் இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ``ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இந்த அர்த்தமற்ற வன்முறைச் செயலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, ``இந்த கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் இந்திய மக்களின் மன உறுதியையும், மீள்தன்மையையும் அசைக்க முடியாது. சம்பந்தப்பட்ட குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்தார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

கேரள தொழிலதிபர் மனைவியுடன் கோடாரியால் வெட்டி கொலை; அஸ்ஸாம் இளைஞரிடம் விசாரணை; பின்னணி என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் திருவாதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான விஜயகுமாரும் அவரது மனைவி மீராவும் பெரிய பங்களாவில் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 22) காலை அவரது வீட்டுக்கு வ... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது, நம்மிடம் பேசியவர்கள், ... மேலும் பார்க்க

Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ... மேலும் பார்க்க

`16-ம் தேதி திருமணம்.. 22-ம் தேதி கடற்படை அதிகாரி பலி' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் நடந்த கொடூரம்

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் பணியில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திரும... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல்: `இதுவரை 28 பேர் பலி' - தாக்குதலுக்கு பின்னணியில் யார்?

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டதட்ட 28 பேர் உ... மேலும் பார்க்க

திருமணம் செய்ய சொன்ன பெண் எஸ்.ஐ; துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய இன்ஸ்பெக்டர் - தண்டனை விவரங்கள்

மும்பை கல்யாண்-ல் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வினி. இவரை கடந்த 2016-ம் ஆண்டு தானே இன்ஸ்பெக்டர் அபய் குருந்தர் கடத்திச்சென்று படுகொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி கடலில் வீசிவிட்டதாக குற... மேலும் பார்க்க