செய்திகள் :

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

post image

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார்.

அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்தியாவிற்கும், ஜம்மு & காஷ்மீருக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி இருந்தது.

இது மிகப்பெரிய பிரச்னையாகவும் இருந்தது. ஆனால், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது" என்று பேசியிருந்தார்.

Jammu & Kashmir
Jammu & Kashmir

ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பாஜக அரசின் இந்த முடிவைப் பாராட்டி இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சல்மான் குர்ஷித்தின் பேச்சை மேற்கோள் காட்டி பாஜக, காங்கிரஸைச் சீண்டி வந்த நிலையில், சல்மான் குர்ஷித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று பதிவிட்டுள்ளார்.

அதில், "தீவிரவாதத்திற்கு எதிரான பணியில் இருக்கும் போது, இந்தியாவின் செய்தியை உலகிற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, நமது உள்நாட்டில் இன்னும் மக்கள் அரசியல் செய்து கொண்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது. ஒருவர் தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பஹல்காம்: "ஆதாரம் கேட்டார்களா?" - அப்பாவிடம் ஊடகவியலாளர் இஷான் தரூர் கேள்வி; சசி தரூரின் பதில் என்ன?

பஹல்காம் தாக்குதல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் என ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கடந்த மாதம் வரை இந்தியா பரபரப்பாக இருந்தது. அதே நேரம் பல்வேறு நாடுகளிலிருந்து ... மேலும் பார்க்க

கேரளா: ஆளுநர் மாளிகையில் காவிக்கொடியுடன் பாரதமாதா; மாற்றச் சொன்ன அமைச்சர்; சர்ச்சையின் பின்னணி என்ன?

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் மாநில வேளாண் அமைச்சர் பி. பிரசாத் ஆகியோர் இணைந்து ராஜ்பவனில் சுற்றுச்சூழல் தின விழாவைத் தொடங்கி வைக்கும் ந... மேலும் பார்க்க

Trump Gold Card: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறலாம்; நிபந்தனைகள் என்ன?

"ட்ரம்ப் கோல்ட் கார்ட், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்கான 5 மில்லியன் டாலர் பாதை. இது அமெரிக்க பொருளாதாரத்தில் பங்குவகிக்க விரும்பும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரம... மேலும் பார்க்க

'ஏழு ஆண்டுக்கால மின் தடை பிரச்னைக்குத் தீர்வு!' - திருச்சி எம்.பி துரை வைகோவின் மகிழ்ச்சி பதிவு

ஏழு ஆண்டுகள் மின் பிரச்னையால் தத்தளித்த மக்களின் பிரச்னை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முடிவுக்கு வர இருப்பதாக, திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்.பி துரை வைகோ மகிழ்ச்சியோடு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்... மேலும் பார்க்க