செய்திகள் :

MLA மனோஜ் பாண்டியனின் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு; குடும்பத்தினர் காயம்; பரவும் வீடியோ;பின்னணி என்ன?

post image

ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் முருகன் (48). இவர், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியனிடம் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இசக்கி, அவருடைய சகோதரர் குமார் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் முருகன், அவரது மனைவி மாரியம்மாள், தாய் ஆவுடையம்மாள், மகன் பிரவீன் ஆகியோரை அரிவாள், கம்பு ஆகியவற்றால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த நால்வரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள்
காயமடைந்தவர்கள்

பலத்த காயமடைந்த முருகன், அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐந்து பேர் கொண்ட கும்பல், ஓட்டுநர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: சகோதரி கண்ணெதிரே பெண் பாலியல் வன்கொடுமை; இபிஎஸ் கண்டனம்; 2 போலீஸ்காரர்கள் கைது

திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏந்தல் புறவழிச்சாலை வழியாகச் சென்ற ஆந்திர மாநிலத்... மேலும் பார்க்க

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: தவெக விஜய் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இதனால், "விஜய்யைக் கைது செய்து தமிழக வெற்றிக் கழ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: தாய், மகள் படுகொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது - அதிர்ச்சிப் பின்னணி

கிருஷ்ணகிரி அருகேயுள்ள பாஞ்சாலியூர் யாசின் நகரைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 48). கடந்த 2018-ம் ஆண்டு, தன் கணவர் இறந்துவிட்ட நிலையில், அவர் செய்து வந்த வட்டிக்குவிடும் தொழிலை எல்லம்மாள் செய்யத் தொடங்... மேலும் பார்க்க

மாமனார்-மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன் - என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலுள்ள ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாசன் மகன் அரவிந்தன் (வயது 32). இவரும், பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் நந்தினி என்பவரும் கடந்த 13 ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! - என்ன நடந்தது?

கரூர் சம்பவம்தவெக தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரண... மேலும் பார்க்க

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர்; கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் மனைவி - காரணம் என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் பிரதாப். ஊடகவியலாளரான இவர் கடந்த 19-ம் தேதி திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜீவ் பிரதாப்பின் குடும்பத்தினர் காவல் நி... மேலும் பார்க்க