செய்திகள் :

MUDA வழக்கில் அடுத்த திருப்பம்; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம்; ED சொல்லும் கணக்கு என்ன?

post image

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) இழப்பீடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

இதில், சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரிக்க, மறுமுனையில் அமலாக்கத்துறையும் விசாரணையை மேற்கொண்டது.

சித்தராமையா
சித்தராமையா

இந்த வழக்கில், இதுவரையில் சுமார் ரூ. 300 கோடி சந்தை மதிப்புள்ள 160 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது சித்தராமையாவுக்குத் தொடர்புடைய சுமார் ரூ. 100 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், "சித்தராமையா மற்றும் பிறர் தொடர்புடைய முடா ஊழல் வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் 09-06-2025 அன்று சுமார் ரூ.100 கோடி சந்தை மதிப்புள்ள 92 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்கில், இதுவரையில் மொத்தமாக ரூ. 400 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன" என்று பதிவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'விஜய் எங்கள் வீட்டு பையன்; அதிமுக தந்த கடிதத்தை நாகரிகம் கருதி..!' - கூட்டணி குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். கட்ச... மேலும் பார்க்க

2026 தேர்தல் : 'தயக்கம் காட்டும் கட்சிகள்; அமித் ஷா சொல்வது ஒரு வகையான பில்டப்' - திருமாவளவன்

2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டங்கள், மாநாடுகள் என பரபரப்பில் உள்ளது. இப்போது வரை, திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட... மேலும் பார்க்க

'2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..!' - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம... மேலும் பார்க்க

கீழடி : 'தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்கும் வேலைகளை செய்கிறது பாஜக' - வைகோ

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயலுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒன்றிய அரசை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவி... மேலும் பார்க்க

'திமுகவை அகற்றுவேன் என்று கூறியவர்களை காலமே விழுங்கியிருக்கிறது' - அமித் ஷாவை சாடிய நாஞ்சில் சம்பத்

கிருஷ்ணகிரியில் நேற்று திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அமித் ஷாவின் சென்னை விசிட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசியதாவது..."தமிழில் பேசத் தெ... மேலும் பார்க்க

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லிய... மேலும் பார்க்க