செய்திகள் :

`சிறந்த நீர் நிலைகள் பராமரிப்பு' - மத்திய அரசின் விருதுக்கு நெல்லை மாவட்டம் தேர்வானது எப்படி?

post image

தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்குகின்றன. குளங்கள் சீரமைப்பு, ஏரிகள் மற்றும் கண்மாய்களைப் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் சில மாவட்டங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் மாவட்டங்களை மத்தியரசு தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இந்தாண்டில் இந்த விருது பெற தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் விண்ணப்பித்த நிலையில், நெல்லை மற்றும் நாமக்கல் மாவட்டங்களை மட்டும் மத்தியரசு விருது பெற தேர்வு செய்துள்ளது.

சீரமைக்கப்பட்ட தாமிரபரணி ஆறு

நெல்லை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விண்ணப்பத்தில், நெல்லையில் மோசமான நிலையில் இருந்த பல குளங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் நதிநீர் இணைப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

தாமிரபரணி நதியை செம்மைபடுத்தி வருவதால் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய அருகாமை மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டதன்படி நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? நீர் நிலைகளில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதா? என மத்திய நீர்வளத்துறை விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வளத்துறையின் முதுநிலை விஞ்ஞானி ராஜ்குமார் மற்றும் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்டத்திற்கு வந்தனர்.

தாமிரபரணி ஆற்று பயன்பாட்டினை கண்காணிக்கும் சிசிடிவி கேமரா

வண்ணாரப்பேட்டை பலாப்பழ ஓடை, வேய்ந்தான்குளம், தாமிரபரணி ஆற்றுப்படுகை, மழை நேரங்களில் ஓடும் வெள்ளம் தாமிரபரணியில் கலக்கும் வாறுகால்கள் ஆகிய பகுதிகளில் 3 நாள்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் மத்தியரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். இந்தியாவிலேயே நதிநீர் இணைப்புத் திட்டமாக தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத்திட்டத்தை சாத்தியப்படுத்தியதே நெல்லை மாவட்டம் விருது பெற முக்கியக் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க