செய்திகள் :

இங்கிலாந்து லயன்ஸில் விளையாடிய 19 வயது வீரருக்கு தேசிய அணியில் இடம்!

post image

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய 19 வயது இளம் வீரருக்கு தேசிய அணியில் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் 2 அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடின. இவ்விரு போட்டிகளும் டிராவில் முடிந்தன.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய லயன்ஸ் வீரர் எட்டி ஜாக்கிற்கு தேசிய அணியினருடன் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 19 வயதான 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவரான எட்டி ஜாக், ஹாம்ஷையர் அணி வேகப்பந்து வீச்சாளராவார். இவர் கே.எல்.ராகுல், துருவ் ஜூரேல், நிதீஷ்குமாரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இவரின் பந்துவீச்சு ஃபிலிண்டாப், மார்க் வுட், கிரேமி ஸ்வான் ஆகியோரை கவர்ந்துவிட்டதாக தி டைம்ஸ் லண்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கவுன்டி சாம்பியன்ஸிப்பில் விளையாட ஜாக், இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இங்கிலாந்து 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியிலும் விளையாடியுள்ளார். மேலும், ஜிம்பாப்வேக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளதாலும், இந்தத் தொடர் முழுவதும் மார்க் வுட் விளையாடாததாலும், அதைத் தொடர்ந்து கஸ் அகிட்சனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் ஜாக்கிற்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: நேற்று ஓய்வு.. இன்று நியூயார்க் அணி கேப்டன்..! பூரனின் புதிய பரிமாணம்!

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க