செய்திகள் :

Mumbai: பாதுகாப்புக் கசவமின்றி தண்ணீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்ட தொழிலாளர்கள்; விஷவாயு தாக்கி பலி

post image

மும்பையின் தென் பகுதியில் உள்ள நாக்பாடாவில் 40 மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30 மாடிகள் கட்டப்பட்டுவிட்டது. இக்கட்டிடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அந்த தொட்டி இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அதனைச் சுத்தப்படுத்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். முதலில் ஹசிபுல் மற்றும் சியுல் ஷேக் ஆகியோர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்கள் உள்ளே இறங்கிய பிறகு எந்த வித தகவலும் இல்லை. இதையடுத்து மேலும் இரண்டு பேர் உள்ளே இறங்கினர். அவர்களிடமிருந்தும் எந்த வித தகவலும் இல்லை.

இதையடுத்து ஐந்தாவதாக புதான் ஷேக் என்பவரைக் கயிறு கட்டி தொட்டிக்குள் இறக்கின்றனர். உள்ளே இறங்கப்பட்டதும், அவரைத் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த விஷவாயு தாக்க ஆரம்பித்தது. உடனே புதான் ஷேக் சத்தம் போட்டுக் கத்தியதால் அவரை வெளியில் இழுத்தனர்.

மும்பை

மேலே வந்தவுடன் அவர் மயக்கம் அடைந்துவிட்டார். இதையடுத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி உள்ளே மயங்கிக் கிடந்த 4 பேரையும் வெளியில் எடுத்து வந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 4 பேரும் விஷவாயு தாக்கி இறந்திருந்தனர்.

இது குறித்து புதான் ஷேக் கூறுகையில், "ஆரம்பத்தில் தொட்டியைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். இதன் மூலம் விஷவாயு வெளியேறி இருக்கும். இரண்டு ஆண்டுகளாகத் தொட்டி மூடப்பட்டு இருந்ததால் சகதிகள் சேர்ந்து விஷவாயு உருவாகி இருக்கிறது. தொட்டிக்குள் இறங்கும்போது எந்த வித பாதுகாப்புக் கவசமும் கொடுக்கப்படவில்லை.

கடந்த பல ஆண்டுகளாகத் தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து வருகிறோம். ஆனால் இது போன்று ஒருபோதும் நடந்ததில்லை'' என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 2 ஒப்பந்ததாரர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின்னணி என்ன?

கூடலூரில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அரசுப் பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23-ம் நிதியாண்டில், வாணியம்பாடி தொகுதி எ... மேலும் பார்க்க

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடியதால் விபரீதம்... மருத்துவமனையில் 4 சிறுவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஷ் (வயது-6). அதே பகுதியைச் சேர்ந்தவர்களான பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5... மேலும் பார்க்க

சிவகங்கை: மேடையில் ஆடும்போதே உயிரிழந்த நடனக் கலைஞர்; புத்தகத் திருவிழாவில் நடந்த சோகம்

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டு... மேலும் பார்க்க

Ooty: கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த தாய்; சடலமாய் குழந்தைகள்; ஊட்டியை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- ஷாலினி தம்பதி. இவர்களுக்கு நித்தீஷ் என்கிற 5 வயது ஆண் குழந்தையும், பிரிநிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலை... மேலும் பார்க்க