செய்திகள் :

Noor Ahmad: `மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது.!’ - முதல்போட்டி குறித்து நூர் அகமது

post image

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக விளங்கும் சென்னை (CSK) vs மும்பை (MI) போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் அடித்தது. அதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, ஒப்பனர் ரச்சின் ரவீந்திரா, ஒன்டவுன் ருத்துராஜ் கெய்க்வாடின் அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்தில் 158 ரன்கள் எட்டி வெற்றிபெற்றது.

தோனி - சூர்யகுமார் யாதவ்
தோனி - சூர்யகுமார் யாதவ்

இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் சென்னை சார்பில் 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், திலக் வர்மா, நமன் திர் ஆகியோரின் விக்கெட்டுகளை அள்ளிய நூர் அஹமது ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக, இவரின் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவை தோனி எப்போதும் போல மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார்.

மெகா ஏலத்தின்போது பெரும் தொகையாக ரூ.10 கோடிக்கு தன்னை எடுத்த சென்னை அணியின் நம்பிக்கையை நூர் அகமது தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்று காப்பாற்றியிருக்கிறார்.

`மஹி பாய் போன்ற ஒருவர்..!'

சி.எஸ்.கே-வில் முதல் போட்டி குறித்து பேசிய நூர் அஹமது, “ஐபிஎல் போட்டிகளில் இங்கு விளையாடுவது எனக்கு மிகவும் ஸ்பெஷல். சிஎஸ்கே அணிக்காக என்னுடைய பங்களிப்பை கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நூர் அஹமது
நூர் அஹமது

சரியான இடத்தில் பந்தை டெலிவரி செய்வது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனால்தான் இப்படி என்னால் விளையாட முடிந்தது. சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு ஸ்பெஷல். மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்" என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Dhoni: `தோனியிடம் இதைச் சொல்ல CSK பயிற்சியாளர்களுக்கு தைரியம் இல்லை’ - இந்திய முன்னாள் வீரர் பளீச்

ஐபிஎல் ரசிகர்களின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான சி.எஸ்.கே vs ஆர்.சி.பி போட்டி சேப்பாக்கத்தில் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் ருத்துராஜ் முதலில் ப... மேலும் பார்க்க

CSK vs RCB: `சேப்பாக்கத்தில் ஹோம் க்ரவுண்ட் சாதகம் இல்லவே இல்லை’ - தோல்விக்குப் பின் ஃப்ளெமிங்

ஐபிஎல் 2025-ல் நேற்று நடந்த சி.எஸ்.கே vs ஆர்.சி.பி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியுள்ளது பெங்களூரு அணி. இந்த நிலையில் தங்களுக்கு... மேலும் பார்க்க

Dhoni : `இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வராத `பேட்ஸ்மேன்' தோனி!' - சென்னை அணிக்குத் தேவைதானா?

'இக்கட்டான சூழலில் இறஙகாத தோனி!'சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றிருக்கிறது. தோல்வியை விட அவர்கள் தோற்றவிதம்தான் வேதனையானது. போராடும் குணமே இல்லாமல் மந்தமாக ஆடி வீழ்... மேலும் பார்க்க

CSK vs RCB : 'டார்கெட் மட்டும் 170 க்குள்ள இருந்திருந்தா கதையே வேற' தோல்விக்குப் பின் ருத்துராஜ்

'சென்னை தோல்வி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களுரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை ... மேலும் பார்க்க

CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?' தோல்விக்கான அந்த 3 காரணங்கள்

'பெங்களூரு வெற்றி!'அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூரு அணி 2008 இல் சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, இத்தனை ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணி சென்னையை வீழ்த்தியதே இல்ல... மேலும் பார்க்க

Dhoni: `தம்பி நீங்க அவுட் கெளம்பலாம்' - பிலிப் சால்ட்டை கண்ணிமைக்கும் நொடியில் அசால்ட்டாக்கிய தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணியும், ஆர்.சி.பி அணியும் இன்று மோதின. 2008-க்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கெதிராக வெற்றி பெற்றதில்லை என்கிற வரலாற்றை மாற்றியமைக்க பெங்களூரு... மேலும் பார்க்க