செய்திகள் :

Ooty: இந்தி பதாகை சர்ச்சையில் ஊட்டி ரயில் நிலையம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?

post image

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மலை ரயில் நிலையம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மத்திய அரசின் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 90 சதவிகித பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

பதாகை சர்ச்சை

ஊட்டி நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த ஊட்டி மலை ரயில் நிலையத்தை பழைமை மாறாத வகையில் புனரமைக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதனை செவிமடுக்காத மத்திய அரசு தங்கள் போக்கிற்கு கட்டுமான வடிவமைப்பை மாற்றியிருப்பதாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊட்டி ரயில் நிலைய சுவர்களில் பொன்மொழி கருத்துக்கள் சிலவற்றை

தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகள் அடங்கிய பதாகைகளை அமைத்துள்ளனர். இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட வாசகங்கள் முதல்

பதாகை சர்ச்சை

பாரதியார் எழுதிய கவிதை வரிகளை மதன் மோகன் மாளவியா எழுதியதாக வைக்கப்பட்டிருக்கும் பதாகைகள் வரை அனைத்தும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. ஊட்டி ரயில் நிலையத்திற்கு வரும் தமிழ் பற்றாளர்கள் பலரும் இந்த பதாகைகளை இணையத்தில் பகிர்ந்து கடுமையான எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், " சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்பது மகாகவி பாரதியார் எழுதிய பாடல் வரிகள். தமிழ் மொழியை மேம்படுத்தவும், உலக அறிவை தமிழில் கொண்டுவரும் நோக்கில் பாரதியார் எழுதிய பொன்மொழியை மதன் மோகன் மாளவியா எழுதியதாக பெயர் வைத்திருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை.

பதாகை சர்ச்சை

அதுமட்டுமின்றி தேசியம் , தேசிய மொழி, இந்தி போன்றவற்றை வழிந்து திணிக்கும் வகையிலும் பல பதாகைகளை வைத்திருக்கிறார்கள். மாற்றப்பட‌ வேண்டும்" என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஊட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, " வாசகங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தெற்கு ரயில்வே தலைமையில் இருந்து வைக்கச் சொன்னார்கள் வைத்தோம் " என முடித்துக் கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

போக்குவரத்து துறையில் சொதப்பும் DMK மாடல் | Iran - Israel War | ADMK TVK | Imperfect Show 20.6.2025

* ஸ்விஸ் வங்கிகளில் ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரித்த இந்தியர்களின் பணம்?* வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா!* Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈ... மேலும் பார்க்க

`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய ஜெகன்மூர்த்தி

கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து இ... மேலும் பார்க்க

'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அதிரடி மாற்றம்

இதுவரை தமிழ்நாடு ரேஷன் கடைகளில் PHH மற்றும் PHH AAY அட்டைதாரர்கள் ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும், இரண்டு முறை கைரேகை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இனி இரண்டு கைரேகைகள் தேவையில்லை என்று ... மேலும் பார்க்க

'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு அழுத திருச்சி சிவா

நண்பரின் இரங்கல் கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், எம்.பி திருச்சி சிவாவின் நண்பருமான மிசா ராமநாதனின் புகழஞ்சலி கூட்... மேலும் பார்க்க

திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட் அவலம்!

'ஸ்மார்ட் சிட்டி மார்கெட்!'நெல்லையில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ஸ்மார்ட் சிட்டி மார்கெட், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளையும் ... மேலும் பார்க்க