செய்திகள் :

Pahalgam Attack: "துணிச்சலான வீரர் சையது" - உயிர்த் தியாகம் செய்த குதிரை ஓட்டிக்கு ஊரே கூடி அஞ்சலி

post image

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் நேற்று (ஏப்ரல் 23) டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. வாழ்க்கைத் துணையை, சகோதரரை, தந்தையை இழந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் காணொலிகள் காண்போரின் நெஞ்சை உலுக்கியிருக்கின்றன.

இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணியில் பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது.

லெப்டினன்ட் வினய் நர்வால் இறுதி அஞ்சலி
லெப்டினன்ட் வினய் நர்வால் இறுதி அஞ்சலி

இந்தச் சோக சம்பவம் நடந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அப்பகுதியில் இருக்கும் மக்கள் உதவியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்தபோது தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு, அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த சையது அடில் ஹுசைன் பரிதாபமாகத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இதை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பு, மகிழ்ச்சியாகச் சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க, திடீரென துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்டது.

தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது இரக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே அங்கிருந்த அனைவரும் பதறி அடித்துப் பாதுகாப்பான இடத்தை நோக்கித் தப்பி ஓடினோம்.

துப்பாக்கிச் சூடு நடக்கும் போது அங்குக் குதிரை சவாரி நடத்தி வந்த சையது அடில் ஹுசைன் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கத் தீவிரவாதிகளை நோக்கித் துணிச்சலுடன் தாக்க முயன்று, அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார்.

ஆனால், அந்தத் தீவிரவாதிகள் ஆத்திரமடைந்து சையது அடில் ஹுசைனை சுட்டுக் கொன்றுவிட்டனர்" என்று கூறுகின்றனர்.

சையது அடில் ஹுசைனின் இறுதி அஞ்சலி நிகழ்வு
சையது அடில் ஹுசைனின் இறுதி அஞ்சலி நிகழ்வு

சையது அடில் ஹுசைனின் உடல் நேற்று அரசு மற்றும் அப்பகுதி மக்கள் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.

'துணிச்சலான வீரர் சையது அடில் ஹுசைன்' என்ற கோஷத்துடன் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி உணர்ச்சிப் பெருக்குடன் இறுதி அஞ்சலி செய்தனர்.

காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சையத் அடில் ஹுசைனி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, "சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கும் துணிச்சலான முயற்சியில் பயங்கரவாதிகளில் ஒருவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

சையத் அடில் மட்டுமே அவரது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுபவர். அவரை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு அரசு துணை நிற்கும்.

அவரது அசாதாரண துணிச்சலும் தியாகமும் என்றென்றும் நினைவுக் கூறப்படும்" என்று பேசியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Simla Agreement: போர் அமைதிக்கான சிம்லா ஒப்பந்தம்; ரத்து செய்யப்பட்டால் என்னவாகும்? - ஓர் பார்வை

கடந்த ஏப்ரல் 21.04. 2025 தேதியில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியா 'சிந்து நதி நீர் ஒப்பந்த'த்தை ... மேலும் பார்க்க

Boycott Prabhas Movie Issue: ``நான் பாகிஸ்தானி இல்லை..'' - பிரபாஸ் பட நடிகை இமான்வி விளக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் நேற்று (ஏப்ரல் 23) டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``கார்கில் முதல் கன்னியாகுமரி வரை துக்கமும் ஆத்திரமும் நிறைந்திருக்கிறது" - மோடி

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர்... மேலும் பார்க்க

Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த 5 அதிரடி முடிவுகள்

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (ஏப்ரல் 22) கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இந்திய கடற்பட... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``என் வாழ்வில் சிறந்த மனிதர்..'' - திருமணமான 4 நாளில் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2... மேலும் பார்க்க

Pahalgam Attack: "விரைவில் தீவிரவாதிகளைப் பிடிப்போம்; தக்க பதிலடி கொடுக்கப்படும்..." - ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்த... மேலும் பார்க்க