செய்திகள் :

Paridhabangal: "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவது சமூக தீண்டாமை" - சீமான் காட்டம்

post image

நாம் கட்சி தலைவர் சீமான் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "விஜய் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் குறையும் என வதந்திகளைப் பரப்புகின்றனர்.

செத்து சாம்பல் ஆனாலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். நான் மக்களுக்கானவன், என் வெற்றியும், தோல்வியும் மக்களுக்கானது" என்று கூறியிருக்கிறார்.

சீமான்
சீமான்

தொடர்ந்து கோபி, சுதாகர் மீதான வழக்குப்பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "படிக்கின்ற பிள்ளைகளின் பைக்குள் அரிவாள் இருக்கிறது என்றால் பயமாக இருக்கிறது. ஒரு தலைமுறை இவ்வளவு நஞ்சாக வளர்கிறது என்று நடுக்கமாக இருக்கிறது.

கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவதெல்லாம் சமூக தீண்டாமையைக் காட்டுகிறது. சமூகத்தின் சாதியக் கொடுமையைக் காட்டுகிறது. பெருமை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதி, மதத்தில் இருக்கக்கூடாது.

பரிதாபங்கள்: கோபி - சுதாகர்
பரிதாபங்கள்: கோபி - சுதாகர்

தமிழர்களுக்கு மொழி, இனம், வரலாறு, தன்னுடைய பண்பாடு, தன்னுடைய கலாசாரம் என இதில்தான் பெருமை இருக்க வேண்டும். சாதி, மதத்தில் பெருமை இருக்கக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Vijay: 'எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது' - தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் டெல்லியில் எம்.பி-க்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், ... மேலும் பார்க்க

`அதிகரித்த பதற்றம்; தடுப்புகளை தாண்டிய அகிலேஷ்’ - ராகுல் தலைமையில் அதிர வைத்த பேரணி | Spot Report

பீகார் மாநிலத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் ப... மேலும் பார்க்க

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் `எழுத்தாளர் மேடை'; படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சி!

மதுரை நகரில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை ஈர்த்திருக்கிறது `கலைஞர் நூற்றாண்டு நூலகம்'.மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 2010... மேலும் பார்க்க

SIR: `தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டம்' - தடுப்பை தாண்டிய அகிலேஷ்; ராகுல் காந்தி கைது!

2024 மக்களவைத் தேர்தலின் போது ஆளும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் பெரும் ஆதரவுடன் "வாக்கு திருட்டு" செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்கின்றனர். மேலும், பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடை... மேலும் பார்க்க

SIR: ``தோளோடு தோள் நிற்கிறோம்..." - இந்தியா கூட்டணியின் ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம், முறைகேடான வாக்காளர் பட்டியல், தேர்தலின்போது வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள... மேலும் பார்க்க

கீழடி: "சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்" - அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனை பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ... மேலும் பார்க்க