செய்திகள் :

PBKS vs MI: "பேச்சைவிட செயலில் காட்டுகிறேன்" - BCCI-க்கு சொல்கிறாரா ஸ்ரேயஸ் ஐயர்

post image

நடப்பு ஐபிஎல் சீசனில் இன்னும் இரண்டு லீக் போட்டிகள்தான் இருக்கிறது.

பிளேஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் ஏற்கெனவே முன்னேறிவிட்டாலும், புள்ளிப்பட்டியலில் அந்த நான்கு அணிகளில் முதல் இரண்டு இடங்களை எந்த அணிகள் பிடிக்கப்போகிறது என்பதை இந்த இரண்டு லீக் போட்டிகள்தான் முடிவு செய்யப்போகிறது.

அதில், ஒரு போட்டிதான் பஞ்சாப் vs மும்பை இன்றைய போட்டி.

ஸ்ரேயஸ் ஐயர் - ஹர்திக் பாண்டியா
ஸ்ரேயஸ் ஐயர் - ஹர்திக் பாண்டியா

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி நிச்சயம் முதல் இரண்டு இடங்களில் தனது இடத்தை உறுதி செய்துவிடும்.

ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், "பேச்சை விட செயலில் காட்டுகிறேன். நான் அவர்களுக்கு (அணியினர்) சில மோட்டிவேஷன் தருவேன். பிறகு களத்தில் செயல்படுத்துவது அவர்களின் வேலை.

ஜேமிசன், விஜய்குமார் வைஷாக் பிளெயிங் லெவனில் இருக்கிறார்கள். மைதானத்தின் அளவு, காற்று ஆகிய காரணிகளால் இந்த மைதானம் இரு அணிக்கும் ஏற்றது.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

இன்றைய நாளை எப்போதும் போன்ற ஒருநாளாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆட்டத்தையும், மனநிலையையும் மேம்படுத்த வேண்டும்.

கடுமையான அழுத்தத்திலிருந்து மேலே வருபவன் நான். உங்கள் கால்களை நீங்கள் முன்னோக்கி வைக்கவேண்டும். தவறுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது" என்று கூறினார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயரை இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் பிசிசிஐ தேர்வுக்குழு தேர்வு செய்யாததற்கு சேவாக் உட்பட பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

CSK: "அவருடைய வழிகாட்டுதலில் வளர விரும்புகிறேன்" - தோனி குறித்து உர்வில் படேல் உருக்கம்!

அமைதி, தலைமைத்துவம் மற்றும் பணிவைக் கற்றுக்கொடுக்கும் ஒரு மாஸ்டர்கிளாஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 IPL சீசன் சிறப்பானதாக அமையவில்லை என்றாலும், இளைஞர்கள் - அனுபவமிக்க விரர்களின் பிணைப்பையும் அத... மேலும் பார்க்க

"RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்" - கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!

ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம்... மேலும் பார்க்க

ICC: 'இனி ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு பந்துதான்' - ஒருநாள், டி20, டெஸ்ட் விதிகளில் மாற்றம்; முழு விவரம்

ICC புதிய விளையாட்டு வரையறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜூன் மாதம் முதல் இந்த வரையறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதில் ஒருநாள் போட்டிகளில் ஒரே பந்தைப் பயன்படுத்தும் முறை கவன... மேலும் பார்க்க

IPL 2025: 'நேற்று குஜராத் அணியும் வெற்றியை நோக்கி சென்றது, ஆனால் நாங்கள்...' - ஹர்திக் சொல்வது என்ன?

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் குவா... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சான்ஸ்; இங்கிலாந்தில் சதத்துடன் கரியரை மீண்டும் தொடங்கிய Karun Nair!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேவாக்குக்குப் பிறகு ஒரே இந்திய வீரராக முச்சதம் அடித்து, 8 ஆண்டுகளாக மீண்டும் ஒரு வாய்ப்புக்காகப் போராடி, கடந்த ஓராண்டாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய ... மேலும் பார்க்க

Gill : 'ஒரு மேட்ச்ல 3 கேட்ச் விட்டா இப்படித்தான்...' - குஜராத் கேப்டன் கில் அதிருப்தி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியை மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு சென்றிருக்கிறது... மேலும் பார்க்க