செய்திகள் :

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

post image

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசிகர்கள் பற்றியும் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்டிருக்கும் பதிவில், 'இந்த சீசன் விரும்பியபடி முடியவில்லை. ஆனால், இந்தப் பயணம் அற்புதமாக இருந்தது. எங்களின் இளம் பஞ்சாப் அணியினர் காட்டிய போராட்டமும், உறுதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் முன் நின்று வழிநடத்திய விதமும், இந்தியாவின் புதிய வீரர்கள் இந்த ஐபிஎல்-ஐ ஆதிக்கம் செலுத்திய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமானது. முக்கிய வீரர்கள் காயம் மற்றும் வேறு சில காரணங்களால் இடையில் வெளியேறினர். போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, உள்ளூர் ஆட்டங்களை மற்ற மாநிலங்களுக்கு மாற்றினார்கள்.

ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா

எல்லாவற்றையும் கடந்து ஒரு தசாப்தத்திற்கு பிறகு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, ஒரு அற்புதமான இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடினோம்.

ஒவ்வொரு வீரரும் அந்த இறுதிப்போட்டியில் காட்டிய விடாப்பிடியான குணத்திற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும், எங்கள் அணியின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த அற்புதமான சீசனுக்காக ஒரு பெரிய நன்றி.

ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா

நாம் இன்று இருக்கும் இடமும், இவ்வளவு தூர பயணமும் உங்கள் ஆதரவால் மட்டுமே சாத்தியப்பட்டது. நம்முடைய வேலை இன்னும் பாதி மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு மைதானத்தில் சந்திப்போம், அதுவரை எல்லோரும் பத்திரமாக இருங்கள். உங்கள் எல்லாருக்கும் என் அன்பும் நன்றியும்!' எனக் கூறியிருக்கிறார்.

'ஸ்ட்ராபெரி விவசாயி, யூடியூபர், திரிணாமுல் காங் எம்.பி..!' - அந்த 2011 டீம் இப்போ என்ன பண்றாங்க?

'பியூஷ் சாவ்லா ஓய்வு!'பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் இது ஒரு 'சிவாஜி செத்துட்டாரா...' மொமண்ட்தான்.... மேலும் பார்க்க

Gukesh - Magnus Carlsen: சாதனையைத் தவறவிட்ட குகேஷ்; 1.5 புள்ளி வித்தியாசத்தில் கார்ல்சன் சாம்பியன்!

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஸ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் கலந... மேலும் பார்க்க

TNPL 2025: நம்ம விஜய் சங்கரா இது... பேட்டிங், பௌலிங்கில் அசத்தல்; திருப்பூரை வீழ்த்திய சேப்பாக்!

கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2025 சீஸன் இரண்டாவது போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் நேற்று இரவு மோதினார்கள். திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. முத... மேலும் பார்க்க

ஆர்மினியா செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!; நூலிழையில் தவறவிட்ட பிரக்ஞானந்தா

ஆர்மீனியா நாட்டின் ஜெர்முக்கில் கடந்த மே 29-ம் தேதி, 6-வது ஸ்டீபன் அவக்யான் நினைவு செஸ் தொடர் (Stepan Avagyan Memorial chess tournament) தொடங்கியது.இதில், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்... மேலும் பார்க்க

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க