செய்திகள் :

Rain Update: எந்தெந்த மாவட்டங்களில் 24-ம் தேதி வரை மழை; முழு விவரம்

post image

தற்போது இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, 'தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது'.

இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 24-ம் தேதி வரையில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

இதனால், புதுச்சேரி முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். ஏற்கெனவே மழை பெய்து வரும் மாவட்டங்களில் மழை இன்னும் வலுபெறும் வாய்ப்புகள் உள்ளது. காவிரி படுகையில் உள்ள மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை
மழை
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்...

"தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 19), தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (அக்டோபர் 20) காலை 8.30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது, மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.

Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? | முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் க... மேலும் பார்க்க

Rain Alert: `இரவில் கொட்டித் தீர்க்கும் கனமழை; கலக்கத்தில் மக்கள்' - ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தண்டவாளத்தில் மண்சரிவு தொடர் மழையின் காரணமாக ... மேலும் பார்க்க

Rain Updates: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு Red Alert; வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு என்ன?

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது சில மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் இன்று செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப... மேலும் பார்க்க

Rain Updates: 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் தகவல்

கடந்த சில நாள்களாகவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. இன்று காலை 10 மணி வரை... சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நா... மேலும் பார்க்க

Rain Alert: ``இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்'' - சென்னை வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றைய முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

தேனி: வரலாறு காணாத கனமழை... வெள்ளக்காடான பகுதிகள்! | Photo Album

வரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவர... மேலும் பார்க்க