செய்திகள் :

RCB : '10 வருசத்துல 4 ஐ.பி.எல் கப் ஜெயிச்சிட்டேன்' - ஆட்டநாயகன் க்ரூணால் பாண்ட்யா

post image

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.

ஆட்டநாயகன் விருதை வென்ற க்ரூணால் பாண்ட்யா பேசுகையில், "நாங்கள் முதலில் பேட் செய்கையிலேயே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. எவ்வளவு மெதுவாக வீசுகிறோமோ அந்தளவுக்கு பேட்டர்களைத் திணறடிக்க முடியும் என தீர்மானித்தேன்.

அதனால்தான் வேகத்தை மாற்றி மாற்றி மெதுவாக வீசினேன். சூழல் என்ன அங்கே என்ன தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் என்னுடைய பலம் என்கிறேன்.

Krunal Pandya - Player Of The Match
Krunal Pandya - Player Of The Match

இது நல்ல பேட்டிங் பிட்ச்தான். ஆனால், கொஞ்சம் மெதுவாக வீசும்போது பேட்டர்கள் திணறுவார்கள். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு இன்னும் கொஞ்சம் சௌகரியம் இருந்தது.

நான் ஆர்சிபி அணியோடு இணைந்தபோது, 'எனக்கு கோப்பைகளை வெல்வது பிடிக்கும்.' என்றேன். இப்போது மூன்றரை மாதம் கழித்து நான் சொன்னது நடந்துவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளின் இது எனக்கு நான்காவது கோப்பை. ஹர்திக்குடன் போனில் பேசினேன். பாண்ட்யாக்களின் வீட்டில் 11 ஆண்டுகளில் 9 ஐ.பி.எல் கோப்பைகள் இருக்கிறது என்றேன்." என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந... மேலும் பார்க்க

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்..." - நெகிழும் ரோஹித்

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா.தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை,... மேலும் பார்க்க

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க