செய்திகள் :

Rohit Sharma : 'நீங்க 100 அடிச்சு டீம் தோற்றா எந்த பயனும் இல்ல!' - கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா

post image

'ரோஹித் பேட்டி!'

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் க்ளார்க்குக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், கேப்டன்சி குறித்து நிறைய விஷயங்களை ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Rohit Sharma
Rohit Sharma

ரோஹித் சர்மா பேசியதாவது, '2019 உலகக்கோப்பைக்குப் பிறகு எனக்கு ஒரு புரிதல் கிடைத்தது. அந்த உலகக்கோப்பையில் நான் 5 சதங்களை அடித்திருந்தேன். ஆனால், தொடரை வெல்லவில்லை. தொடரை வெல்லாமல் அவ்வளவு ரன்களை அடித்து என்ன பயன்? அதன்பிறகுதான் தொடர்களை வெல்வதும் சாம்பியன்ஷிப்களை வெல்வதும்தான் முக்கியம் எனும் நிலைக்கு வந்தேன்.

'கேப்டன்சியை கற்றுக்கொண்ட விதம்!'

ஒரு பேட்டராக நான் சந்தித்த சரிவுகளிலிருந்துதான் கேப்டன்சியை கற்றுக்கொண்டேன். ஒரு பேட்டராக என்னை வழிநடத்த யாருமே இல்லை. என்னுடைய தவறுகளை நானேதான் கண்டறிந்து திருத்திக் கொள்ள வேண்டிய சூழல். டிவியில் நான் ஆடிய போட்டிகளையே மீண்டும் மீண்டும் பார்ப்பேன். அப்போது எதிரணி கேப்டன்கள் எனக்கு எப்படி பீல்ட் செட் செய்கிறார்கள்.

நான் கேப்டனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்றெல்லாம் யோசித்து யோசித்தே கேப்டன்சியை கற்றுக்கொண்டேன். டி20 போட்டிகளுக்கு கேப்டன்சி செய்வதுதான் சவாலான விஷயம். இங்கே ஒரே ஓவரில் போட்டி நம்முடைய கையை விட்டு செல்லக்கூடும்.

'எதை விடவும் அணிதான் முக்கியம்!'

எனக்கு நானே நேர்மையாக நடந்துகொள்ள விரும்பினேன். என்னால் பந்துகளை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் வேறு சில வீரர்களும் சரியாக ஆடவில்லை. இதனால் அணியின் மீது அழுத்தம் கூடியது. அதனால்தான் என்னை நானே ட்ராப் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தேன். அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவரிடம் பேசினேன்.

Rohit Sharma
Rohit Sharma

இது சரி தவறு என கொஞ்ச நேரம் விவாதம் நடந்தது. கடைசியில் அணியில் நலனை மனதில் வைத்து அந்த முடிவை எடுத்தோம். தேசிய அணிக்கு கேப்டனாக இருக்கையில் என்னுடைய வீரர்களும் இதே மனநிலையில்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எப்போதுமே அணியின் நலன்தான் முக்கியம். அதனால் வீரர்கள் தனிப்பட்ட சதங்களையோ விக்கெட்டுகளையோ எண்ணி வருத்தப்படக்கூடாது.

நீங்கள் சதமடித்துவிட்டு அணியால் வெல்ல முடியவில்லையெனில் அதில் என்ன பலன் இருக்கிறது?' என்றார்.

MI vs CSK: "ஜடேஜாவை டாப் ஆர்டருக்கு மாற்ற இதான் காரணம்!" - ஸ்டீபன் ப்ளெம்மிங் சொல்வது என்ன?

'மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் இன்று நடக்கவிருக்கிறது. இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் ஆடியிருக்கின்றன... மேலும் பார்க்க

RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ் கானால் வென்ற லக்னோ!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களம் கண்டன. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்... மேலும் பார்க்க

Avesh Khan : 'நான் ஒன்றும் ஸ்டார்க் இல்லை... ஆனாலும்!' - திரில்லிங் கடைசி ஓவர் பற்றி ஆவேஷ் கான்!

'லக்னோ திரில் வெற்றி!'ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன்கள் வித... மேலும் பார்க்க

IPL 2025: "கமெண்ட்ரில நீங்க என்ன வேணா பேசலாம்; ஆனா..." - ஹர்ஷா போக்லே கேள்விக்கு டிம் டேவிட் பதில்

'பெங்களூரு தோல்வி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாச... மேலும் பார்க்க

IPL 2025: "சஹால்தான் ஐபிஎல்லின் ஆகச்சிறந்த பௌலர்" - ஸ்ரேயாஷ் ஐயர் ஓப்பன் டாக்

'பஞ்சாப் வெற்றி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியைப் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற... மேலும் பார்க்க

RCB vs PBKS : 'எங்களோட பேட்டிங்லதான் பெரிய பிரச்சனை இருக்கு!' - கேப்டன் ரஜத் பட்டிதர் அதிருப்தி!

'பெங்களூரு தோல்வி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற... மேலும் பார்க்க