செய்திகள் :

Rs 50-crore dog: "அந்த நாய் ரூ.50 கோடியெல்லாம் இல்லைங்க" - அமலாக்கத் துறை சோதனையில் வெளிவந்த உண்மை

post image

பெங்களூரைச் சேர்ந்த எஸ்.சதிஷ் என்ற நபர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாய் என்றும் உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட நாய் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதை வைத்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் நல்ல பணம் சம்பாதித்திருக்கிறார். மேலும், தனது 7 ஏக்கர் பண்ணையில் பல அரிய வகை நாய்களை வைத்திருப்பத்தாகப் பெருமையாகப் பேசி பிரபலமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

wolfdog

ஒரு நாயே ரூ.50 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்றால் அவரது பண்ணையில் இன்னும் எவ்வளவு மதிப்பில் நாய்கள் இருக்கும் என்று ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு அவருக்கு மாஸை ஏற்றிவிட, அவரிடம் எப்படி இவ்வளவு பணம் புழங்குகிறது என்கிற சந்தேகத்தில் அமலாக்கத் துறை அவரது பண்ணையில் சோதனை நடத்தியிருக்கிறது.

அந்தச் சோதனையில் கோடிகளில் பணம் வைத்திருக்கும் சதீஷ் மாட்டுவார் என்று பார்த்தால், அவர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியது பொய் என்று சொல்லி மாட்டிக்கொண்டுள்ளார்.

wolfdog

அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயெல்லாம் இல்லையாம், அவர் பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் நாய் பக்கத்து வீட்டுக்காரரின் இந்திய வகையைச் சேர்ந்த நாய் என்பதும் அதன் விலை ரூ.1 லட்சம் என்பதும் அம்பலமானது. கருப்புப் பணமா? ஹவாலாவா? எனப் பல மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரித்ததில், அவரே உண்மையைச் சொல்லி சரணடைந்திருக்கிறார். ஒரு பொய்யோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, இப்படி பல பொய்களைக் கூறி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பணம் சம்பாதித்திருக்கிறார். அதோடு நாயின் விலையை கோடிகளில் சொல்லி சமூக வலைதளங்களில் பெருமை அடித்து மாட்டிக்கொண்டிருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்த... மேலும் பார்க்க

Anurag Kashyap: `அனுராக் கஷ்யப் மன்னிப்பு கேட்கவில்லை எனில்..!’ - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந... மேலும் பார்க்க

தொடரும் மர்மம்: முடி உதிர்ந்து வழுக்கையான கிராமத்தில் நகம் சேதமடைந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷெகாவ் தாலுகாவில் உள்ள நான்கு கிராமங்களில் மக்களின் தலையில் இருந்து திடீரென முடி உதிர ஆரம்பித்தது. மொத்தம் மொத்தமாக முடி உதிர்ந்து ஒட்டுமொத்த தலையே வழுக்கையான... மேலும் பார்க்க

கார் 4 கோடி; நம்பர் 46 லட்சம் - கேரளாவை அசரவைத்த CEO; பின்னணி என்ன?

லிட்மஸ் சிஸ்டம்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் வேணு கோபாலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர். சமீபத்தில் இவர், கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே அதிக விலைக்கு நம்பர் பிளேட்டை ... மேலும் பார்க்க

`போலி பனீர்' ஷாருக்கான் மனைவி நடத்தும் உணவகத்தில் கலப்படம்? -யூடியூபர் புகார்; கெளரி கான் விளக்கம்

மும்பையில் பிரபலங்கள் நடத்தும் ரெஸ்டாரண்ட்மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ... மேலும் பார்க்க

Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட... மேலும் பார்க்க