செய்திகள் :

Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!

post image

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன.

சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட்டுக்குருவியைக் காப்பாற்ற, கிராம மக்களுடன் மாவட்ட நிர்வாகமும் நீதித்துறையும் செயல்பட்ட சம்பவம், மனதை நெகிழவைக்கிறது.

சிட்டுக் குருவி

உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி, 6 மாதங்களாக சீல் வைக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் துணிக்கடைக்குள் சிக்கியுள்ளது சிட்டுக் குருவி ஒன்று.

கட்டடத்தில் உள்ள குழாய் வழியாக உள்ளே சென்ற பறவை மீண்டும் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் மாட்டிக்கொண்டதாக அக்கம்பக்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடையின் கண்ணாடி முகப்புக்கும் ஷட்டருக்கும் இடையிலான இடத்தில் கடந்த செவ்வாய் அன்று அதனைக் கண்டுள்ளனர். இறக்கைகளை படபடப்பாக அடித்தபடி, மனிதர்களை வெறித்துக்கொண்டிருந்த அந்த குருவியை சட்ட சிக்கல்கள் காரணமாக கடையைத் திறக்க முடியாததால் காப்பாற்ற முடியவில்லை.

சிட்டுக் குருவி

ஆனாலும் குருவியின் உயிரைக் காக்க தானியங்களையும் தண்ணீரையும் குழாய் வழியாக வழங்கியுள்ளனர்.

குருவியைக் காப்பாற்ற பஞ்சாயத்து அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் சில அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளனர். யாராலும் உதவ முடியவில்லை. இதற்கிடையில் குருவி பற்றிய செய்தி ஊடகங்கள் வழியாக பரவியது.

மாவட்ட ஆட்சியர் அருண் கே விஜயன், மாவட்ட நீதிபதியைத் தொடர்புகொண்டு அவர் மூலமாக பஞ்சாயத்து அதிகாரிகள் கடையைத் திறக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மாவட்ட நீதிபதி, இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவைப் பெற்றார். வியாழன் அன்று தக்கலசேரியில் இருந்து 50 கிலோமீட்டர் பயணம் செய்து துணிக்கடையை அடைந்து அவர் முன்னிலையில் கடையைத் திறக்க உத்தரவிட்டார்.

கதவு திறக்கப்பட்டு பறவை வெளியே வரவும், பறவையின் சுதந்திரத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

நீதிபதி, "மனிதரோ, விலங்குகளோ, பறவையோ ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. உயிர் வாழ்வதற்கு நீதிமன்றமோ சட்மோ தடையாக இருக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்; குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய யானைகள் | Viral video

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ நகரில் நேற்று (ஏப்ரல் 14) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, 5.2 ரிக்டர் அளவில் ஜூலியனுக்கு தெற்கே... மேலும் பார்க்க

Resignation: "இப்படித்தான் நடத்தப்பட்டேன்" - கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய ஊழியர்!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர், ஊழியர் ஒருவரின் கடுமையான ஆனால் வினோதமான ராஜினாமா கடிதத்தை லின்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல இழிவாக நடத்தப்பட்டதாகவும், குறைத்து ... மேலும் பார்க்க

Cambodia: கன்னிவெடிகளை கண்டறிந்து உயிர்களைக் காக்கும் எலி - யார் இந்த ஹீரோ?

போர்களில் விடப்பட்ட 100க்கும் மேலான கன்னிவெடிகளை கண்டுபிடித்த முதல் எலி என்ற சாதனையைப் படைத்துள்ளது, ரோனின் என்ற 5 வயதான 'ஆப்ரிக்க பெரிய பை எலி' (African Giant Pouched Rat) . கின்னஸ் உலக சாதனைகள் கூறு... மேலும் பார்க்க

கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூட்டிய நாய்..!

மும்பை புறநகர் பகுதியான கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மும்பை திரைப்பட நகரம் இருக்கிறது. அதோடு பொதுமக்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருக்கின்றனர். எனவே, `குடியிருப்புக்குள் சி... மேலும் பார்க்க

MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வனத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர் சிறுத்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் வீடியோ வைரலானது.மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவால், ஓட்டுநருக்குப் பிரச்னை வந்துள்ளது. அவர் தனது வ... மேலும் பார்க்க

ஆந்திரா: `பறவைக் காய்ச்சல் பாதிப்பு' - சமைக்காத கோழிக்கறியை சாப்பிட்ட 2 வயது சிறுமி உயிரிழப்பு

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அங்குள்ள பல்நாடு மாவட்டத்தில் நரஸ்ராவ்பேட் என்ற நகரத்தில் வசிக்கும் இரண்டு வயது சிறுமிக்கு அவளது பெற்றோர் சமைப்பதற்காக வாங்கி வந்த கோழி கறியில் ஒரு ச... மேலும் பார்க்க