செய்திகள் :

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்; குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய யானைகள் | Viral video

post image

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ நகரில் நேற்று (ஏப்ரல் 14) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, 5.2 ரிக்டர் அளவில் ஜூலியனுக்கு தெற்கே 4 கி.மீ தொலைவில் சான் டியாகோ கவுண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் அதிர்வு, லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட தெற்கு கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

இந்த நிலையில், நிலநடுக்கத்தின்போது சான் டியாகோ மிருகக்காட்சி சாலை சஃபாரி பூங்காவில் (San Diego Zoo Safari Park) ஆப்பிரிக்க யானைகள் கூட்டம், தங்களின் குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய நிகழ்வு வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆங்கங்கே பூங்காவில் நின்றுகொண்டிருந்த யானைகள் நிலநடுக்கம் ஏற்பட்ட நொடியில் அதிர்ச்சியில் ஒவ்வொரு திசையில் ஓடி பின்னர் ஓரிடத்தில் சேர்ந்து வட்டமாக நின்றன.

இது குறித்து, சான் டியாகோ மிருகக் காட்சி சாலை சஃபாரி பூங்கா எக்ஸ் தளத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து, "யானைகள் தனது கால்கள் மூலம் ஒலியை உணரும் தனித்துவமான திறனைக் கொண்டிருக்கின்றன. தெற்கு கலிஃபோர்னியாவை 5.2 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியபோது, யானைகள் எச்சரிக்கை வளையத்தை உருவாக்கின. இது, யானைகள் தங்கள் கூட்டத்தைப் பாதுகாக்கச் செய்யும் இயல்பான எதிர்வினை. நிலநடுக்கத்துக்குப் பிறகு, எலெஸ் நட்லுலா, ஜூலி, ம்காயா, உம்கானி, கோசி (யானைகள்) தங்கள் வழக்கத்துக்குத் திரும்பின" என்று பதிவிட்டிருக்கிறது.

Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட... மேலும் பார்க்க

Resignation: "இப்படித்தான் நடத்தப்பட்டேன்" - கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய ஊழியர்!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர், ஊழியர் ஒருவரின் கடுமையான ஆனால் வினோதமான ராஜினாமா கடிதத்தை லின்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல இழிவாக நடத்தப்பட்டதாகவும், குறைத்து ... மேலும் பார்க்க

Cambodia: கன்னிவெடிகளை கண்டறிந்து உயிர்களைக் காக்கும் எலி - யார் இந்த ஹீரோ?

போர்களில் விடப்பட்ட 100க்கும் மேலான கன்னிவெடிகளை கண்டுபிடித்த முதல் எலி என்ற சாதனையைப் படைத்துள்ளது, ரோனின் என்ற 5 வயதான 'ஆப்ரிக்க பெரிய பை எலி' (African Giant Pouched Rat) . கின்னஸ் உலக சாதனைகள் கூறு... மேலும் பார்க்க

கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூட்டிய நாய்..!

மும்பை புறநகர் பகுதியான கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மும்பை திரைப்பட நகரம் இருக்கிறது. அதோடு பொதுமக்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருக்கின்றனர். எனவே, `குடியிருப்புக்குள் சி... மேலும் பார்க்க

MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வனத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர் சிறுத்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் வீடியோ வைரலானது.மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவால், ஓட்டுநருக்குப் பிரச்னை வந்துள்ளது. அவர் தனது வ... மேலும் பார்க்க

ஆந்திரா: `பறவைக் காய்ச்சல் பாதிப்பு' - சமைக்காத கோழிக்கறியை சாப்பிட்ட 2 வயது சிறுமி உயிரிழப்பு

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அங்குள்ள பல்நாடு மாவட்டத்தில் நரஸ்ராவ்பேட் என்ற நகரத்தில் வசிக்கும் இரண்டு வயது சிறுமிக்கு அவளது பெற்றோர் சமைப்பதற்காக வாங்கி வந்த கோழி கறியில் ஒரு ச... மேலும் பார்க்க