செய்திகள் :

Cambodia: கன்னிவெடிகளை கண்டறிந்து உயிர்களைக் காக்கும் எலி - யார் இந்த ஹீரோ?

post image

போர்களில் விடப்பட்ட 100க்கும் மேலான கன்னிவெடிகளை கண்டுபிடித்த முதல் எலி என்ற சாதனையைப் படைத்துள்ளது, ரோனின் என்ற 5 வயதான 'ஆப்ரிக்க பெரிய பை எலி' (African Giant Pouched Rat) .

கின்னஸ் உலக சாதனைகள் கூறுவதன்படி, 2021ம் ஆண்டு முதல் கம்போடியா முழுவதும் ஆபத்தான 109 கன்னி வெடிகளையும் 15 வெடிக்காத போர் ஆயுதங்களையும் கண்டுபிடித்துள்ளது இந்த எலி.

அப்போபோ என்ற லாப நோக்கமற்ற நிறுவனம்தான் இந்த ஆண் எலிக்கு பயிற்சி அளித்துள்ளது. 30 ஆண்டுகளாக இந்த நிறுவனம் போர்களில் விடப்பட்ட கன்னிவெடிகளை எடுப்பதற்காக எலிகளை தயார்படுத்தி வருகிறது.

Ronin

இந்த எலிகள், மோப்பம்பிடித்து தரையில் கிளறுவதன்மூலம் கன்னிவெடிகளைக் கண்டறிகின்றன. இப்படியாக பல வெடிக்காத வெடிகளை கண்டெடுத்து கம்போடியாவை பாதுகாப்பானதாக மாற்றுவதில் மிக முக்கியமான வேலையை ரோனின் செய்துள்ளது என்கின்றனர்.

ரோனின் குறித்து அதன் பயிற்சியாளர்கள், "அவன் கடின உழைப்பாளி, நட்புடன் பழகக்கூடியவன், ரிலாக்ஸான ஆள்" எனக் கூறியுள்ளனர்.

அப்போபோ செய்தி தொடர்பாளர் லில்லி ஷாலோம், "ரோனினின் வெற்றிகரமான கரியருக்கு காரணம் அவனது கூர்மையான கவனம் செலுத்தும் திறனும், வலுவான பணி நெறிமுறையும், பிரச்னைகளைத் தீர்ப்பதில் இருக்கும் ஆர்வமும்தான் காரணம்.

அப்போபோ

அவனுடைய புத்திசாலித்தனமும், இயல்பான ஆர்வமும் அவனுக்கு ஈடுபாட்டை வழங்குகின்றன. இதனால் கன்னிவெடிகளைக் கண்டுபிடிப்பது வேடிக்கையான விளையாட்டாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிய சோதனைகளை எதிர்கொண்டு சாதித்துள்ளான்" எனக் கூறியுள்ளார்.

ரோனினின் சாதனைகள் எலிகளின் திறனை வெளிக்காட்டுவதாகக் கூறுகின்றனர். அப்போபோ குழுவினர், ரோனின் எங்களின் சொத்து மட்டுமல்ல, அவர் ஒரு மதிப்புமிக்க கூட்டாளி மற்றும் சக ஊழியர் எனக் கூறியுள்ளனர்.

எலி ஹீரோக்களின் வாழ்க்கை

ரோனின் போன்ற எலிகள் தினமும் 30 நிமிடம் வரைப் பணியாற்றுகின்றன. பயிற்சிக்குப் பிறகு சில ஆண்டுகள் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவற்றின் நலனைக் கருதி சில காலத்தில் ஓய்வளிக்கப்படுகின்றன.

மகவா எலி

கம்போடியா உலகிலேயே அதிகம் கன்னிவெடிகள் வைக்கப்பட்ட நாடாக உள்ளது. உள்நாட்டுப்போர் 1998ம் ஆண்டே நிறைவடைந்திருந்தாலும் 1000 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பகுதிகளில் இப்போதும் கன்னிவெடிகள் இருக்கின்றன.

போர்களில் வைக்கப்பட்ட ஆயுதங்களால் 40,000க்கும் மேற்பட்ட கம்போடிய மக்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.

ரோனினுக்கு முன்பு மகவா என்ற மற்றொரு எலி அதிக கன்னிவெடிகளை எடுத்த சாதனையைப் படைத்திருந்தது. அதன் 5 ஆண்டு பணி காலத்தில், 79 கன்னிவெடிகளையும் 39 பிற வெடிக்கும் ஆயுதங்களையும் கண்டறிந்திருந்தது.

2022ம் ஆண்டு மரணமடைவதற்கு முன்பு PDSA விலங்கு தொண்டு நிறுவனத்தின் தைரியத்துக்கான விருதைப் பெற்றிருந்தது.

Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட... மேலும் பார்க்க

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்; குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய யானைகள் | Viral video

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ நகரில் நேற்று (ஏப்ரல் 14) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, 5.2 ரிக்டர் அளவில் ஜூலியனுக்கு தெற்கே... மேலும் பார்க்க

Resignation: "இப்படித்தான் நடத்தப்பட்டேன்" - கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய ஊழியர்!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர், ஊழியர் ஒருவரின் கடுமையான ஆனால் வினோதமான ராஜினாமா கடிதத்தை லின்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல இழிவாக நடத்தப்பட்டதாகவும், குறைத்து ... மேலும் பார்க்க

கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூட்டிய நாய்..!

மும்பை புறநகர் பகுதியான கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மும்பை திரைப்பட நகரம் இருக்கிறது. அதோடு பொதுமக்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருக்கின்றனர். எனவே, `குடியிருப்புக்குள் சி... மேலும் பார்க்க

MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வனத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர் சிறுத்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் வீடியோ வைரலானது.மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவால், ஓட்டுநருக்குப் பிரச்னை வந்துள்ளது. அவர் தனது வ... மேலும் பார்க்க

ஆந்திரா: `பறவைக் காய்ச்சல் பாதிப்பு' - சமைக்காத கோழிக்கறியை சாப்பிட்ட 2 வயது சிறுமி உயிரிழப்பு

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அங்குள்ள பல்நாடு மாவட்டத்தில் நரஸ்ராவ்பேட் என்ற நகரத்தில் வசிக்கும் இரண்டு வயது சிறுமிக்கு அவளது பெற்றோர் சமைப்பதற்காக வாங்கி வந்த கோழி கறியில் ஒரு ச... மேலும் பார்க்க