செய்திகள் :

MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?

post image

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வனத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர் சிறுத்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் வீடியோ வைரலானது.

மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவால், ஓட்டுநருக்குப் பிரச்னை வந்துள்ளது. அவர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

cheetah

கடந்த வார இறுதியில் வைரலாக பரவிய அந்த வீடியோவில், சிறுத்தை குடும்பம் ஒன்று மரத்துக்கு அடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அப்போது ஒரு கிராமவாசி கேனில் தண்ணீருடன் ஆர்வமாகச் சிறுத்தைக் கூட்டத்தை அணுகுகிறார்.

அவர்தான் வனத்துறையின் ஒப்பந்த ஓட்டுநர் சத்யநாராயண் குர்ஜார் எனப் பின்னாளில் தெரிய வந்தது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் குனோ சரணாலயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் சிறுத்தைகளுக்குச் சில அடி தூரத்திலிருந்து குர்ஜார் தட்டில் தண்ணீர் ஊற்றுகிறார். கேமரவாவுக்கு பின்னிருந்தவர்கள் அவரைத் திரும்பி வருமாறு அழைக்கின்றனர். குர்ஜார் நகர்ந்ததும் சிறுத்தைகள் தட்டிலிருந்த தண்ணீரைப் பருகுகின்றன.

குனோ சரணாலயத்துக்கு அருகாமையில் உள்ள கிராமத்தில் ஜ்வாலா என்ற சிறுத்தையும் அதன் 4 குட்டிகளும் நுழைந்த போது, கிராமவாசிகள் அவற்றைக் கல்லால் அடித்துத் துரத்திய சில நாட்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

பலரும் இந்த வீடியோ மிகவும் உன்னதமானதாகக் கருதினர். உயிர்களுடன் இணைந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டான சைகையாகப் பார்த்தனர்.

ஆனால், வனத்துறையினர் இவற்றை வேறு விதமாகப் பார்த்திருக்கின்றனர். வீடியோ வைரலான சில நாட்களிலேயே குர்ஜார் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக என்.டி.டி.வி தளம் கூறுகிறது. அவருடன் இருந்த வனத்துறை காவலரையும் இடைநீக்கம் செய்துள்ளனர்.

சிறுத்தைகள் மனிதர்கள் அருகில் இருக்கப் பழக்கப்பட்டுவிட்டால் எளிதாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தைகளைச் சக உயிர்களாக எண்ணி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லதாகப்பட்டாலும், அவை மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஆந்திரா: `பறவைக் காய்ச்சல் பாதிப்பு' - சமைக்காத கோழிக்கறியை சாப்பிட்ட 2 வயது சிறுமி உயிரிழப்பு

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அங்குள்ள பல்நாடு மாவட்டத்தில் நரஸ்ராவ்பேட் என்ற நகரத்தில் வசிக்கும் இரண்டு வயது சிறுமிக்கு அவளது பெற்றோர் சமைப்பதற்காக வாங்கி வந்த கோழி கறியில் ஒரு ச... மேலும் பார்க்க

ரத்தன் டாடா உயில்: சமையல்காரர், உதவியாளர், பணியாளர்கள், நண்பர்கள்... யாருக்கு என்ன கிடைக்கும்?

தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய உயில்தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறக்கும் முன்பு உயில் எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் ரூ.3900 கோடி மதிப்புள்ள சொத்துகளை ... மேலும் பார்க்க

`பாவம், கொல்லாதீங்க..' - பாதயாத்திரையில் 250 கோழிகளை மீட்ட ஆனந்த் அம்பானி! என்ன செய்தார் தெரியுமா?

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தற்போது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு 140 கி.மீ நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பலத்த பாதுகாப்புடன் நடைபயண... மேலும் பார்க்க

``கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்'' - 140 கி.மீ துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானி உருக்கம்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. மிகப்பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் உலக தலைவர்கள் என ப... மேலும் பார்க்க

நடுரோட்டில் நடனமாடிய மனைவி; சஸ்பெண்ட் ஆன கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோவால் நடவடிக்கை

சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவு செய்து அதிகமானோர் சம்பாதிக்கின்றனர். சிலர் பொழுதுபோக்கிற்காக இது போன்று சமூக வலைதளத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. அந்த வீடியோ சில நேரங்களில் அதனை வெளியிட்டவர்களுக்க... மேலும் பார்க்க

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: குற்றவாளி டைகர் மேமன் சொத்துகளை மத்திய அரசிடம் ஒப்படைத்த நீதிமன்றம்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தது. மும்பையில் டைகர் மேமன் குடும்பத்திற்க... மேலும் பார்க்க