செய்திகள் :

Ruturaj Gaikwad : 'பவர்ப்ளே... மிஸ் ஃபீல்ட்... நம்பர் 3' -தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருத்துராஜ்

post image

'சென்னை தோல்வி!'

அசாமின் கவுஹாத்தியில் நடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியிருக்கிறது. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி ஏன் தோல்வியை தழுவியது என்பதைப் பற்றி அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருக்கிறார்.

'காரணம் சொல்லும் ருத்துராஜ்'

ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், 'பௌலிங்கில் பவர்ப்ளேயில்தான் நாங்கள் போட்டியை விட்டு விட்டோம் என நினைக்கிறேன். பவர்ப்ளேயில் நாங்கள் இன்னும் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும். நிதிஷ் ராணா ஸ்கொயருக்கு பின்னால்தான் அடிக்கிறார் என்பதை அறிந்து அவரை முன் பக்கம் நோக்கி ஷாட்களை ஆட வைத்திருக்க வேண்டும்.

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

அப்படி செய்யத் தவறிவிட்டோம். மேலும், மிஸ் பீல்டுகள் மூலமும் நாங்கள் 8-10 ரன்களை அதிகம் கொடுத்துவிட்டோம். இந்த மைதானத்தில் 180 என்பது எட்டக்கூடிய ஸ்கோர்தான். இன்னிங்ஸ் ப்ரேக்கில் அவர்களை 180 யை சுற்றி மடக்கியதில் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஏனெனில், தொடக்கத்தில் அவர்கள் 210 ரன்களை நோக்கி செல்வதைப்போல இருந்தது. அஜிங்கியா ரஹானே நம்பர் 3 இல் இறங்கி எங்களுக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார்.

அம்பத்தி ராயுடுவும் எங்களுக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அந்தப் பொறுப்பை இப்போது நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நம்பர் 3 இல் இறங்குகிறேன். இதன் மூலம் அதிரடியாக ஆடக்கூடிய திரிபாதிக்கும் ஓப்பனிங்கில் வாய்ப்பு கிடைக்கும்.

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

இது ஏலத்தின் போதே முடிவு செய்யப்பட்டதுதான். எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. என்னால் ரிஸ்க் எடுத்தும் ஆட முடியும். ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய முடியும். ஆனால், கடந்த சில போட்டிகளாக எப்படி பார்த்தாலும் முதல் 2 ஓவர்களுக்குள்ளாகவே வந்துவிடுகிறேனே. எங்களுக்கு ஓப்பனிங்கில் ஒரு மொமண்டம் கிடைத்துவிடும்பட்சத்தில், நாங்கள் சிறந்த அணியாக மாறிவிடுவோம். நூர் நன்றாக வீசியிருக்கிறார். கலீல் அஹமது நன்றாக வீசியிருக்கிறார். இதையெல்லாம் இங்கிருந்து பாசிட்டிவ்வாக எடுத்துச் செல்கிறோம்.' என்றார்.

CSK vs DC: "தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள்" - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி,... மேலும் பார்க்க

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க

MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் ... மேலும் பார்க்க

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎ... மேலும் பார்க்க

Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்

மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச்... மேலும் பார்க்க

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்... மேலும் பார்க்க