செய்திகள் :

SEBI: மீண்டும் சிக்கலில் Ex செபி தலைவர் மாதபி பூரி புச்; `5 பேர் மீது FIR பதிவு' - நீதிமன்றம் அதிரடி

post image

அதானி குழும பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் அப்போதைய செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரிபுச்-க்கும் தொடர்பு இருக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மாதபி பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.

இந்த நிலையில், அவர் பதவி விலக்கப்பட்டு, புதிய செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் உள்ளிட்ட 5 பேர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென பத்திரிகையாளர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

SEBI முன்னாள் தலைவர் மதாபி பூரி புச்

இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ``முன்னாள் செபி தலைவர் மாதபி பூரிபுச், மற்ற மூன்று செபி அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவேண்டும்" எனக் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Bank GM `ரூ.122 கோடி' வங்கியில் திருடிய பணத்தை என்ன செய்தார்..? சிக்கிய முக்கிய புள்ளிகள்..!

மும்பையை தலைமையிடமாக கொண்டு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் செயல்பட்டு வந்த நியூ இந்தியா கோஆப்ரேடிவ் வங்கியில் ரூ.122 கோடி கையாடல் செய்யப்பட்டு இருப்பதை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் கண்டுபிடித்தது. இதை... மேலும் பார்க்க

Online Scams: கும்பமேளாவையும் விட்டுவைக்காத ஆன்லைன் மோசடி... விடுதி, விமான டிக்கெட் பெயரில் பணமோசடி

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் புனித நீராடவேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். இதற்காக எத்தனையோ சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.... மேலும் பார்க்க

Investment: 1993-ல் ரூ.10,000-க்கு செய்த முதலீடு; இப்போது லட்சங்களில் மதிப்பு! -எப்படித் தெரியுமா?

1993-ம் ஆண்டு ரூ.1,000-க்கு வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் இப்போது எத்தனை லட்சங்களாக உயர்ந்திருக்கும் என்று சும்மா கணக்குப்போட்டு பாருங்களேன்.சென்னையை சேர்ந்தவர் ரவிக்குமார். 1993-ம் ஆண்டு உறவ... மேலும் பார்க்க

Asset Allocation: செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா.. முதலீட்டு உத்திகளை அறிய திருப்பூர் வாங்க..!

செல்வம் சேர்க்க அதனை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதனை அஸெட் அலோகேஷன் (Asset Allocation) என்பார்கள்.பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள்),... மேலும் பார்க்க